(Reading time: 14 - 27 minutes)
Mistake

இங்கே ஓடிவந்து என் அக்கா மகளை கையைப் பிடித்து தரதரவென உங்க வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

 இப்போது உங்க வீட்டில் இருக்கிறாளே சண்பகம் அவள்தான் உன் அப்பாவின் முதல் மனைவி!

 எனக்குத் தெரிந்த பரிகாரம், உங்கப்பா அவளை தன் மனைவியாக ஊரறிய ஏற்றுக்கொள்வதுதான்!

 சண்பகம் ரொம்ப நல்லவள்! அவளுக்கு உன் அப்பாவின்மீது எந்த வருத்தமும் இல்லை. அவள் தனக்கு புதிதாக மணவாழ்வு வேண்டுமெனவும் ஆசைப்படவில்லை!

 உங்கள் அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தின்படி, உங்க குடும்பத்துக்கு ஆதரவாகவும் அன்பாகவும் வாழ்வதுதான் அவள் லட்சியம்!"

 பெரியப்பா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தது, பிரேமா மட்டுமல்ல, அவள் அண்ணனும்தான்!

 பிரேமாவும் அவள் அண்ணனும் சண்பகத்தம்மாவுக்காக கண்ணீர் விட்டதோடு, பெரியப்பாவுக்கு உறுதிமொழியும் தந்தனர்.

 " எங்கப்பா அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறாரோ, இல்லையோ, எங்களுக்கு கவலையில்லை! இனி சண்பகத்தம்மாதான் எங்கள் தாய்!"

 வீடு திரும்பி, தம்பி கண்ணனிடமும் நடந்ததைச்சொல்லி மூவருமாக சண்பகத்தம்மாவின் காலில் விழுந்து கதறினர்.

 " இனி நீங்கள்தான் எங்கள் அம்மா! இது சத்தியம்!"

 " எனக்கு இது போதும்! உங்கம்மாவுக்கு கொடுத்த வாக்குத் தவறாமல் உங்கள் மூவரையும் நான் பெற்ற குழந்தைகளாகவே நினைத்து நடத்துவேன், அது எனக்கு கிடைத்த பாக்கியம்!"

 குமுறியழும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தனர்.

 அழுதுகொண்டிருந்தது, சதாசிவம்தான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.