(Reading time: 70 - 139 minutes)

“ரெண்டு பேருமே இப்ப உயிரோட இல்ல! கொஞ்ச நாளுக்கு முன்னால்  இருவருமே மிட்நைட் கார் அச்சிடேன்ல இறந்துதாங்க. முதலின் அந்த டாக்டர் தான் அடிப்பட்டு இறந்தது. அடுத்த மூன்றாவது நாளில் அந்த போலீஸ்காரனும் அடிப்பட்டு தான் இறந்தான். நாங்க எங்க ஆதியை அடித்துப் போட்டோமோ அதே இடத்தில் அவர்கள் இருவரும் இறந்து கிடந்தனர்”

“டேய் பொய் சொல்லாத”– வினோத்

“உண்மையிலே அன்றைக்கு தான் மகேன் சில பெண்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆதியை காட்டினான்! எங்களுக்கு அப்போதே பயம் தான்! ஆனால் அன்று இரவே டாக்டர் அடிபட்டு இறந்துவிடவே கொஞ்சம் நிம்மதியானோம். அந்த போலீஸ்காரனும் இறந்த பிறகு எங்களின் மேல் யாருக்கும் சந்தேகம் வராதுன்னு நினைத்திருந்தோம்”

மூவரும் அடுத்து என்ன செய்வது கலந்தாலோசிக்க, அதை பயன்படுத்திக்கொண்டு அர்விந்த் சத்தம் எழாமல் மெல்ல நகர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தவன், அவர்களின் சிந்தனை தன் மேல் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் எழுந்து ஓடினான்!

அர்விந்த் ஓடுவதை பார்த்த வினோத் கையை நீட்டி “ஹேய் அவன் தப்பித்து போறான்” கத்தியவன் அவனை பிடிக்க ஓடினான். வினோத் சொல்ல ஆரம்பித்தவுடனே திரும்பி பார்த்த மாறன் அரவிந்தை துரத்தினான்.

இவர்களின் சத்தத்தையும் மீறிஅங்கு கேட்ட வேறோருசத்தத்தின் ஓசை தீபனை வேறு பக்கம் பார்க்க வைத்தது. யாரோ அவர்களுக்கு பின்னால் ஓடும் சத்தம். அர்விந்த் அவனுக்கு முன்னால் ஓட, பின்னால் யாரோ ஓடினார்கள். உருவம் தெரியவில்லை அனால் சத்தம் மட்டும் கேட்டது! அந்த காட்டு வெளிபகுதிக்கு அழைத்து வந்தது. அந்த சத்ததையும் மட்டும் கூர்ந்து கேட்டு சென்றான். அந்த ஓடும் சத்தத்தை வைத்தே தீபன் அதன் பின்னால் தேடிக்கொண்டு சென்றான். அது அவனை காட்டுக்கு வெளியே இருந்த வீட்டை நோக்கி செல்ல வைத்தது.

அந்த வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் அவ்விடம் சுத்தமாக இருந்தது. மீண்டும் சத்தம் கேட்டது. எங்கிருந்து வருகிறது அச்சத்தம். சுற்றி முற்றி பார்த்தான். அந்த வீட்டினுள் இருந்து தான் வருகிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டான் தீபன்! அது வேகமாக கல்லால் சங்கிலியை தட்டும் சத்தமும், அழும் சத்தமும் கேட்டது.

கயவன் 1

கேன் தனது மேல் சட்டையை கழற்றி, அதை வைத்து தரையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை நகற்றினான். ஒரு வழியாக அவர்களால் கலைவாணன் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல முடிந்தது!

கலைவாணனின் மேலிருந்த அந்த சரவிளக்கை நகற்ற இருவருமே சிரம பட வேண்டிருந்தது. அவர்களுக்கு உடலில் ஏற்பட்ட காயத்தினால் மேலும் ரத்தம் வழிந்தது! எப்படியோ அவர்கள் அதை நகற்றவிட்டனர். அவர்கள் அதன் பின்னரே கலைவாணனின் கழுத்துப் பகுதில் பெரிய கிரிஸ்டல் கல் குத்தி கிழித்திருப்பதை பார்த்தனர்.

அந்த பேய் இன்னும் சுவற்றை சுரண்டிக்கொண்டு இருந்தது! அங்கு மேலும் உடைய எந்த பொருட்களும் இல்லாமல் இருக்க, அது அங்கே என்ன செய்கிறது? கலைவாணனின் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்தது. அவனின் கண்கள் மேலே சொருக வலியில் துடித்துக் கொண்டிருந்தான். மகேனால் அவன் துடிப்பதை பார்க்க முடியவில்லை. சற்று முன் தான் அவனை கண்முடித்தனமாக அடித்தது மறந்து போனான்.

ஒரு சகமனுஷனாய் அவனுக்கு உதவி செய்தனர் இருவரும். மகேன் தீபனுக்கு அழைத்து விவரம் சொல்ல தன்னால் இப்போ அங்கு வர முடியாது. இங்குள்ள வேலையை முடித்த பின்னர் வருவதாக சொல்லி வைத்து விட்டான். ரூபன் அவசர எண்ணுக்கு அழைத்து ஆம்புலன்ஸ் உதவியை நாடினான். ரூபன் பேசிக் கொண்டிருக்கையில் மகேன் ஒரு துணியை கொண்டு கழுத்தில் வைத்து ரத்த ஓட்டத்தை கட்டுபடுத்த முயன்றான்.

மகேனின் கவனம் முழுக்க கலைவாணனின் மேல் இருக்க, ரூபனால் தனது கோபத்தை கட்டு படுத்த முடியாமல் “ஏன் அவனின் உயிரை எடுத்தாய்? அப்படி என்ன கொலை வெறி உனக்கு?” அதனிடம் கத்தினான். ரூபன் கோபத்தின் உச்சியிலும் குழப்பத்திலும் இருந்தான். உண்மையில் அங்கு இருப்பது  யாரென தெரியவில்லை அவனுக்கு. தன் கண்முன்னே ஊசலாடும் ஓர் உயிரை பார்க்கையில் தான் அவனை அதனிடம் பேச வைத்தது.

கலைவாணன் மகேனின் கையை பிடித்து ஏதோ சொல்ல முயற்சித்தான். அதை பார்த்த மகேன் கீழே குனிந்து அவன் சொன்னதை கூர்ந்து கேட்டான். அவனின் இறுதி நிமிடங்களில் மிக மெல்லிய குரலில் சொல்லவேண்டியதை சொல்லி முடிக்கையில் அவனின் உயிறும் பிரிந்தது.அவன் கேட்ட செய்தியை உடனே தீபனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.

கயவன் 2

ர்விந்த் தலை தெறிக்க ஓடி, கால் இடறி கால்வாயில் விழுந்தான். தலை சுற்றியது அர்விந்த்க்கு. கை காலில் எல்லாம் சிராய்ப்பு காயங்கள். அவர்கள் இவனை நெருங்கும் முன் மேலே ஏறி ஓட வேண்டும். முட்டியிலும் உள்ளங்கையிலும் ரத்தம் வழிந்தது!

அது எதையும் பொறுப்படுத்தாமல், முடிந்த அளவு ஓட முயற்சித்தான். ஆனால் அவனால் வேகமாக ஓட முடியவில்லை. அவனின் அருகே வந்து விட்ட மாறன், அரவிந்த்தை பின்னாலிருந்து தள்ளி விட முயன்று இருவருமே கீழே விழுந்து வாரினர். கீழே விழுந்ததில் மாறனுக்கு தலையில் அடிப்பட்டத்தில் அவனுக்கு தலை சுற்றியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.