"எங்க அம்மா, அப்பாவும் நான் உன்னையே மனசுல வச்சு வாழாம இருக்கேனு நினைச்சு அவங்களும் நிம்மதி இல்லாம போயிருவாங்க. உனக்கு தான் யாரை பத்தியும் கவலை இல்லையே. போய் சேரு போ", என்று சொன்னவன் கண்களிலும் கண்ணீர் வந்தது.
அந்த கண்ணீரை பார்த்து சிலிர்த்து போனாள் மதி. அவளுக்காக அவன் விடும் இந்த கண்ணீர் அவளை பொறுத்தவரை பொக்கிஷம்.
"அத்தான்", என்று உதடு துடிக்க அழைத்தாள் மதி.
"என்ன அத்தான்? ஆங்? நேத்து படிச்சு படிச்சு சொன்னேன்? இன்னைக்கு அந்த பொம்பளை பேசும் போது வாய மூடி அழுதுட்டு இருக்க? எதுத்து நாழு கேள்வி கேக்க வேண்டியது தான? இதுல சாக போறாளாம். போ போய் சாவு டி. எப்ப உன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்துச்சோ, அப்பவே புரிஞ்சிட்டு உன் மனசுல நான் இல்லைனு. என் மனசுல இருக்குற காதல் உனக்கு என்மேல இல்லை டி. சும்மா கட்டாயத்துனால தான கல்யாணம் செஞ்சிகிட்ட. அதான் சாக போறேன்னு முடிவு எடுக்குற. என்னை லவ் பண்ணிருந்தா, கடைசி வரைக்கும் உங்க கூட வாழ போறேன்னு சொல்லிருப்பல்ல? நாளைக்கு ரிசப்ஷன் முடிஞ்சு நீ உன் ஹாஸ்டலுக்கு போ. போய் செத்தாலும் சரி. இல்லை நீ சொன்ன மாதிரி படிச்சு வேலை வாங்கி தனியா வாழ்ந்தாலும் சரி. என்னை விரும்பலைல? நீ எனக்கும் வேண்டாம் போ டி", என்று எழுந்து கொள்ள பார்த்தான் சூர்யா.
அவன் விலகி விடுவானோ என்ற வேகத்தில் அவன் கைகளை பிடித்து இழுத்தாள் மதி. அவள் மேலேயே விழுந்து, பின் விலகி அவள் அருகில் அமர்ந்தான்.
அடுத்த நொடி "அத்தான்", என்ற கதறலுடன் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள் மதி.
அவளை எலும்புகள் உடையும் அளவுக்கு இறுக்கி அணைத்தவன், அடுத்து என்ன நினைத்தானோ அவளை தன்னிடம் இருந்து விலக்கினான்.
"கோபத்தில் தான் என்னை விட்டு விலகுறானோ?", என்று நினைத்து பரிதவித்தாள் மதி.
அவள் கண்களில் அலைப்புறுதலையும், தன் தோள்கள் மேல் படிந்திருந்த அவள் கைகளில் இறுக்கத்தையும் கண்டவன் அவளை இழுத்து அணைத்து, அவள் உதடுகளில் அழுந்த முத்த மிட்டான்.
கண்களை மூடி அவன் முத்தத்தில் கரைந்தாள் மதி. அவளிடம் இருந்து பிரியவே விரும்பாதவன் போல, மேலும் மேலும் அழுத்தி முத்தமிட்டான் சூர்யா. மூச்சு முட்டி போனாள் அவனுடைய கலை.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}