அதற்குள் அவளின் வருகையை அறிந்து எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த மணி அப்படியே அவள் மேல் பாய்ந்தான்... அவளும் சிரித்து கொண்டே அருகில் அமர்ந்து கொள்ள அவள் முகம் எங்கும் தன் நாக்கால் நக்கி அதன் குஷியை காட்டினான்..
அவனுடன் கொஞ்ச நேரம் கொஞ்சியவள் பின் தன் தோட்டத்தை பார்த்து பூரித்தாள்.. அதற்குள் சென்று ஆட மனம் துடித்தாலும் அவளுடன் வந்த மற்றவர்களின் நினைவு வர வேகமாக திரும்ப உள்ளே வந்தாள்..
அப்பொழுதுதான் மஹா குடும்பத்தாரும் வந்திருக்க, தன் அக்காவை கண்டவள்
மஹா என்று ஓடி சென்று அவளை கட்டி கொண்டாள் பாரதி... இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் திரண்டு நிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.. பின் ஈஷ்வரின் கையில் இருந்த தன் மகனை தூக்கி கொஞ்ச அவன் அப்படியே மஹா சாயலில் இருந்தவனை கண்டு இன்னும் மக
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்றாகியது...
மஹாவும் ஈஷ்வரும் அவன் பெற்றோர்களும் என்னவோ சமாதானம் செய்து அவனை அமர வைத்து காது குத்த அவனோ வலியில் ஆவென்று கத்தினான்...
அதை கண்ட ஆதி பயந்துபோனான்..அந்த ஆசாரி முரட்டுத்தனமாக குத்துவதை போல இருந்தது.. அருகில் இருந்த தன் அன்னயிடம்