(Reading time: 17 - 34 minutes)
Kaarigai
Kaarigai

கேளு... "அவர் முறைக்க, "சாரிமா." என்றவன் அமைதியானான்.

"அவ வரேன்னு சொல்லல. ஆனா வர மாட்டேனும் சொல்லல." -லட்சுமி

"அம்மா குழப்பறீங்க " -சத்யா

"உனக்கு பொறுமையே இல்லைடா. அவ வரமாட்டேன்னு சொல்லல. சோ அவ வர்றா போதுமா?" லட்சுமி சொன்னதும் அவரை அணைத்து கொண்டவன், "தேங்க்ஸ் மா" என்று அவரின் கன்னத்தில் இதழ் பதித்தான்.

"அம்மா அப்பறம் நான் பண்ணுனது பத்தி...ஏதாவது சொன்னாளா?" தயக்கமாக கேட்டான் சத்யா.

"அவ எதுவும் சொல்லல. நானும் எதுவும் கேக்கல. நீ பண்ணுனது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? உன்னை நான் மன்னிச்சதே அதுக்கு நீ பரிகாரம் பண்ணனும்னு அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்ரதால மட்டும் இல்லை. அந்த ஆஸ்ரமத்துக்கு உன் உழைப்புல நீ சம்பாதிச்ச ஐந்து லக்ஷம் ரூபாய என் பேருல கொடுத்த பார்த்தியா. அதுக்காக நீ பண்ணுன தப்பை நான் மன்னிச்சுட்டேன்.ஆனா அதுக்காக அவகிட்ட உனக்காக எல்லாம் நான் பேச மாட்டேன். நீ தான் பேசணும். அவ உன்னை மன்னிச்சிட்டேன்னு சொல்ற வரைக்கும் நீ தான் அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும். இதுக்கு இடைல நான் வரமாட்டேன். அப்பறம் ஒரு விஷயம். அவ நம்ம வீட்டுக்கு வந்தா அவளுக்கு மனசு வருத்தப்படற மாதிரி  நீ நடந்துக்க கூடாது. நான் அவளுக்கு வாக்கு கொடுத்திருக்கேன். சரி நீ போயி வண்டியை ரெடி பண்ணு. நான் அவளை கூட்டிட்டு வரேன். " அவனிடம் சொன்னவர் எழுந்து உள்ளே செல்ல, அவள் தங்கள் வீட்டிற்கு வருகிறாள் என்பதை நம்ப முடியாமல் வெளியே சென்றான் சத்யா.

Episode # 03

Episode # 05

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.