பண்ண முடியாதே!”,சந்தியாவின் தந்தை சட்டென கேட்டிருந்தார்.அவர் மனைவியே இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது.
அவர்களின் பணக்காரத் தோரணை தன் மகள் வாழ்க்கை நன்றாக இருக்குமே என்ற யோசனையை அவருக்குள் விதைத்திருந்தது. அவரின் அந்த கேள்வியே வர்மாவின் முகத்தில் சற்று புன்னகையை வரவைத்திருந்தது.
அந்த நேரம் வெளியே சென்றிருந்த சந்தியா உள்ளே வர புதியவர்களைக் கண்டு தன் தாயின் பின் ஒளிந்து நின்றாள்.அவளைப் பார்த்தவாறே லட்சுமி தேவி,
“அதைப் பத்தியெல்லாம் நீங்க கவலையே பட வேண்டாம்.பொண்ணை மட்டும் அனுப்புங்க அது போதும்.”
“ஆண்டவன் என் பொண்ணுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணுவான்னு நினைச்சுக் கூட பார்க்கல..இப்போனு பார்த்து அவ ஊர்ல இல்லாம போய்ட்டா..”
“அப்போ இது??”
“இவ சின்னவள் சந்தியா..மூத்தவள் சரண்யா..”
“நாங்க…உங்க சின்ன பொண்ணைத் தான் பொண்ணு கேட்டு வந்துருக்கோம்..”,அடுத்த அதிர்ச்சியை இறக்கினார் லட்சுமி.சந்தியா இன்னுமாய் தன் தாய்க்குப் பின் மறைந்து நின்றாள்.
“என்னம்மா பேசுறீங்க..மூத்தவ இருக்கும் போது இவளைப் பொண்ணு கேக்குறீங்க!!அப்பறம் அவ வாழ்க்கை என்ன ஆகுறது?இல்ல மா ஒண்ணும் சரியா படல நீங்க கிளம்பி போங்க..”,என்று சந்தியாவின் தந்தை படபடவென பொரிந்து தள்ள அத்தனை நேரம் பார்வையாளராய் மட்டுமே இருந்த வர்மா ஹிந்தியில் தன் மனைவியிடம் கத்த ஆரம்பித்திருந்தார்.
அதில் சற்றே அரண்டுப் போனவர்களாய் மூவரும் முழித்து நிற்க லட்சுமி தேவி அவரை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தினார்.
“இங்க பாருங்க..நான் சொல்றதை பொறுமையா கேளுங்க..எங்க ஜமீன் வழக்கப்படி எங்க குடும்ப நம்பூதிரி ஒருத்தர் இருக்கார் அவர் சொல்ற ராசி நட்சத்திர நாளில் பிறந்த பொண்ணை தான் வீட்டுக்கு மருமகளாவோ மருமகனாவோ நாங்க ஏத்துக்குறது வழக்கம்.
அவ்வளவு ஏன் நானே அப்படி போனவ தான்.எனக்குப் பூர்வீகம் தமிழ்நாடு தான்.என் மாமனார் மாமியார் இதே போல வந்து பேசிதான் எங்க கல்யாணம் நடந்தது.பாருங்க இத்தனை வருஷம் நாங்க எந்த குறையும் இல்லாம சந்தோஷமா நிம்மதியான வாழ்க்கை தான வாழ்ந்துட்டு இருக்கோம்..
ஒருவிதத்துல உங்க பொண்ணுக்கு கிடைச்ச அதிர்ஷடம் தான் இது.அவர் கணிச்சதுபடியான ராசி அம்சங்களோட உங்கபொண்ணு தான் இருக்கா..அவ்வளவு ஏன் நீங்க இருக்குற திசை வரை