(Reading time: 14 - 27 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ஒன்றும் கிடையாது அமித் வெளியில் சென்ற பின் தன் மாமியாரிடம் போய் அமர்ந்து கொள்வாள்.அவருக்குத் தேவையானதச் செய்து கொடுப்பாள்.

தவறியும் தன் மாமனார் புறம் மட்டும் சென்றுவிட மாட்டாள்.அமித்துடனும் பெரிதாய் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை எனினும் கேட்பதற்கு பதில் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவாள்.

இங்கு நிலைமை இப்படியிருக்க அங்கு வீட்டிற்கு வந்த சரண்யாவோ நடந்த அனைத்தையும் கேட்டு கொந்தளித்திருந்தாள்.

என்ன பண்ணி வச்சுருக்கீங்க இரண்டு பேரும்..சின்னப் பொண்ணு மா அவ..ஊர் பேர் தெரியாத இடத்துல போய் தனியா என்ன பண்ணுவா..இப்படி அவளோட வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டீங்களே..அவளுக்கு நம்மளை விட்டா என்னத் தெரியும்..

இதுல ஊர் மொத்தமும் அந்த ஆள் மிரட்டினதுக்காக பொய் சொல்லி வச்சுருக்கீங்க..இப்போ யார்கிட்டேயும் போய் உதவினு கூட கேட்க முடியாது..”,என்று தாயையும் தந்தையையும் சரமாரியாய் கேள்வி கேட்க அவர்களுக்கோ கண்ணீரைத் தவிர பதிலாய் தருவதற்கு வேறு ஒன்றும் இல்லாமல் போனது.

 இப்படியான சூழ்நிலையில் தான் வர்மா மகனையும் மருமகளையும் ஒரு மாத காலம் வெளிநாடு அனுப்பி வைத்தார்.மொழி தெரியாத தேசம் இயற்கையிலேயே பயந்த சுபாவம் என அனைத்தும் சேர்ந்து அதுவாய் அமித்திடம் பழக ஆரம்பித்திருந்தார் சந்தியா.

மீண்டும் தாயகம் வரும்போது இருவருமே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையும் அன்பும் கொண்டவராய் மனமொத்த தம்பதிகளாய் வந்திருந்தனர்.லட்சுமி தேவிக்கு அவர்களை அப்படி பார்த்ததே பெரும் நிம்மதியாய் இருந்தது.

அதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்தது சந்தியா கருவுற்ற செய்தி தான்.வர்மாவே கொண்டாடித் தீர்த்தார் என்று தான் கூற வேண்டும்.வர்மா குடும்பத்தின் முதல் வாரிசு என்ற அங்கீகாரத்திற்கு சொந்தமான குழந்தையை வரவேற்கத் தயாராகியிருந்தார்

அதுவும் பிறந்தது பேரன் என்று தெரிந்தபோது திருவிழாவாகவே கொண்டாடினார் என்றே கூற வேண்டும்.அதன் பின்னான நாட்கள் சந்தியாவைப் பொறுத்தவரை வாழ்வின் பொன்னான நாட்கள்.பிறந்த வீட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை தாண்டிய எந்த கவலையும் அவருக்கு இல்லை என்ற நிலையே.

அமித் சில நேரங்களில் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க முயன்றாலும் ஏதோ ஒரு காரணம் கூறி வர்மா அதை தடுத்து விடுவார்.அதன்பின் வீட்டின் ஒவ்வொரு மகன் மகள்களுக்கும் திருமணம் குழந்தைகள் என வருடங்கள் உருண்டோடத் தொடங்கியிருந்தது.

தொடரும்...

Episode # 14

Episode # 16

Go to Vannamillaa ennangal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.