தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ
“வாழ்க்கை அத்தனை நிம்மதியா இருந்தது..அன்பான கணவர் அழகான குழந்தைனு இருந்த சமயத்துல தான் என் அக்காவை நான் இங்க பார்த்தேன். நானும் அவரும் மட்டும் மாசம் ஒரு முறை லட்சுமி நாரயணன் கோவிலுக்குப் போவோம்.
அப்படி ஒரு நாள் கோவிலில் இருந்து வெளியே வந்த நேரம் எங்க கார் பக்கத்துல அழுக்கு ட்ரெஸும் பாதியான உடம்புமா நின்னவளைப் பார்த்து பாதி செத்துட்டேன்.காலில் விழுந்து கதறி அழுதேன்.அவ ஆத்திரம் தீர என்னை அடிச்சா..என் புருஷன் தான் அவளை சமாதானப்படுத்தி இங்க நடக்குறதைப் பத்தி அவளுக்குப் புரிய வச்சார்.
அப்போ தான் என் அப்பா அம்மா இறந்த செய்தியும் எனக்குத் தெரிய வந்தது.என்னைத் தேடி வந்த இவபட்ட கஷ்டத்தையெல்லாம் கேட்டு ஒரு பக்கம் என் மேலேயே எனக்கு கோபம் வந்தது..அப்போவே செத்துப் போணும்னு நினைச்சேன்.
எங்களைச் சமாதனப்படுத்தி அவளுக்கு தங்குறதுக்கு நம்பிக்கையான ஒரு இடம் பார்த்துக் கொடுத்து ஒரு வேலைக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.ஆனா இது எதுவுமே அந்த வர்மாக்குத் தெரியாது.இவ என்னைத் தேடி வீட்டுக்கு வந்தப்போ என் பெயரைச் சொல்லி பாக்கணும்னு சொன்னதுக்கு அப்படி யாருமே இங்க இல்லனு சொல்லி திருப்பி அனுப்பிருக்காங்க காவல்காரங்க..
இதெல்லாம் தெரிய வந்தா இவளை ஊரை விட்டே அனுப்பிருவாரோனு பயந்து போய் சொல்லாமயே இருந்தோம்.மாசத்துல ஒரு தடவை நான் அவளைப் போய் பாத்துக்குவேன்.இப்படி மனசு கொஞ்சம் கொஞ்சமா இயல்பான நேரத்துல தான் இந்த கடன்காரனுங்க என் வாழ்க்கையில பெரிய இடியை இறக்கினாங்க..”,என்றவர் இருந்த ஆத்திரத்தில் தன்னருகில் இருந்த ராகேஷின் சக்கர நாற்காலியை ஓங்கி காலால் எட்டி உதைத்திருந்தார்.
இதை யாரும் எதிர்பார்க்காத காரணத்தால் வண்டி பின்நோக்கி வேகமாய் நகர மகிழனும் ஆஷிக்கும் சேர்ந்து ஓடிச் சென்று நிறுத்தியிருந்தனர்.
“ம்மா..”
“எத்தனை வருஷம் கழிச்சு இந்த வார்த்தையை கேட்குற மாதிரி இருக்கு தெரியுமா..பெத்த புள்ளைகிட்டேயே பைத்தியமா நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டானுங்க.. இவங்க ரெண்டு பேரும் பிஸினஸைப் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நிறையவே மோசடி பண்ணிருந்தாங்க..அப்பப்போ பணத்தை எடுக்குறது தரமில்லாத பொருளை சப்ளைப் பண்றதுனு எதாவது ஒரு பிரச்சனை பண்ணிணாங்க..
வர்மாகிட்ட சொல்ல பயந்த வியாபாரிங்க உன் அப்பாவைத் தேடி வந்தாங்க..அவங்க சொன்னதையெல்லாம் கேட்ட உங்க அப்பா இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு எச்சரிச்சு