எப்போ எந்த நிலைமைலயும் என்னால முடிஞ்ச உதவியை உங்களுக்கு கண்டிப்பா பண்ணுவேன்..”
“தேங்க்ஸ் அ லாட் ஷியாமா..உனக்குத் தெரியாது உன்னோட இந்த வார்த்தைகள் எனக்கு எவ்வளவு தேவையான ஒண்ணுனு.தேங்க்ஸ் அகெயின்.உன்னால தான் இத்தனை சீக்கிரம் பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு வந்திருக்கு..”,சிநேகமாய் சிரித்தவள் மேலும் சில நிமிடங்கள் அவனோடு பேசிவிட்டு வெளியே வர ஆஷிக்கும் மோனியும் வாசலில் நின்றிருந்தனர்.
“ஹே ஹாய்..”
“சாரி நீங்க ஆஃபீசர்னு தெரியாம ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துகிட்டோம்..”,என்ற ஆஷிக்கை ஆச்சரியமாய் பார்த்தாள் ஷியாமா.
“என்ன இதெல்லாம்!”
“இல்ல நிஜமாவே சொல்லணும்னு தோணிச்சு..கேஷ்வலா பேசுறேன்னு உங்களை எதாவது ஹர்ட் பண்ணிருந்தா ரியலி சாரி..”
“கமான் கைஸ்..உங்களோட துறுதுறுப்பு தான் இப்போ இந்த வீட்ல எல்லாருக்கும் தேவை.முக்கியமா உங்க அண்ணணுக்கு.அண்ட்..நீங்க நிஜமாவே என்னை ஹர்ட் பண்ணிருந்தாலும் நான் தப்பா எடுத்துருக்க மாட்டேன்.
பிகாஸ் நீங்க எனக்கும் சிப்ளிங்க்ஸ் தான்..பை பார்க்கலாம்.”,என்றவள் மோனியின் கன்னம் தட்டிச் சென்றாள்.
மூன்று மாதத்திற்குப் பிறகு,
தன் அலுவலகத்தில் கணிணியை வெறித்திருந்த ஷியாமாவின் மொபைல் அலறியது.பெயரைப் பார்த்தவள் முகத்தில் தோன்றிய புன்னகையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“சொல்லுங்க மகிழன் ஜி..”
“…”
“வாட்!!!!!”
“…”
“சரி சீஃப்கிட்ட சொல்லிட்டு நான் வரேன்”.என்றவள் தன் உயர் அதிகாரியை சந்திகக்கச் சென்றாள்.
“சார் ஜஸ்ட் காட் கால் ப்ரம் மிஸ்டர் மகிழன்..”
“இப்போ என்ன பிரச்சனை?”
“அவங்க பெரியம்மா அதாவது சரண்யா தேவி கோவிலுக்குப் போய்ட்டு வரும்போது யாரோ முகம் தெரியாத கும்பல் பயங்கரமா தாக்கிருக்காங்க..அவங்களை உயிருக்கு ஆபத்தான