அனுப்பினார்.வர்மாக்கு தெரியாம பாத்துகிட்டார்.ஒரு முறை இரண்டு முறை னா பரவால்ல ஆனா இவனுங்க திருந்துற மாதிரி தெரில.ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவராய் உங்க அப்பா இவங்ககிட்ட கறாராய் பேசிட்டார்.
இதோட எல்லா தப்பையும் நிறுத்திக்கலனு சொன்னா வர்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்.இந்த பொறுப்பு எல்லாத்தையும் என் தம்பிங்களையே பார்த்துக்க சொல்லிடுவேன்னு சொல்லிட்டார்.அவர்கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி கேட்டு நாடகமாடிட்டு அடுத்த ஒரு வாரத்துல அவரை கொல்லவே துணிஞ்சுட்டாங்க இந்த பாவிங்க..
குடோன்ல நெருப்பு வச்சு அதை காரணமா காட்டி இவரை அங்க வர வைக்க சதி பண்ணிணாங்க..அந்த போன் வந்தவுடனே எதைப் பத்தியும் யோசிக்காம ட்ரைவர் வர்ற வர கூட வெயிட் பண்ணாம கிளம்பிப் போனவர் திரும்ப வந்த கோலம்..
வாழ்க்கையே இருண்டு போச்சு..எதுவுமே நிரந்தரம் இல்லைனு வாழ்க்கை இன்னொரு தடவை புரிய வச்ச நாள் அது.ஒரே நாள்ல அத்தனையும் முடிஞ்சு போச்சு..பிள்ளையை இழந்த உன் பாட்டியும் புருஷனை இழந்த நானும் நடபிணமா தான் வாழ்க்கையை வாழ்ந்தோம்..உன் பாட்டி பாதிக்கு மேல பூஜையறையே கதினு இருந்தாங்க…
ஆனா அந்த வர்மா உன்னை அத்தனை பாதுகாப்பா பாத்துகிட்டார்.நான் கூட என் மாமனார் யாருக்கு எப்படி இருந்தாலும் தன்னோட பேரனை நல்லபடியா பார்த்துக்குறார்னு நினைச்சேன்..உன் அப்பா இறந்து ஒரு வாரம் இருக்கும் எனக்கு மனசு என்னவோ போல இருந்தது.எப்பவுமே நானும் உங்க அப்பாவும் மனசுவிட்டு பேசனும்னா மொட்டை மாடிக்குத் தான் போவோம்.
அவர் நியாபகம் அதிகமா இருந்ததுனாலயோ என்னவோ அங்க போகணும்னு தோணிச்சு..அங்க போனப்போ உன் தாத்தா ஏதோ கத்தி பேசிட்டு இருந்தார் அதைத் தொடர்ந்து அடிக்குற சத்தமும் கேட்டுது.ஏதோ பிரச்சனை போலனு கீழே இறங்கிடலாம்னு நினைச்சப்போ அந்த சர்வேஷ் கதறி அழுது மன்னிப்புக் கேட்ட சத்ததுல அப்படியே நின்னுட்டேன்.
அக்ஸிடெண்ட் பண்ண ட்ரைவரைப் பிடிச்சு விசாரிச்சதுல இவங்க தான் பண்ண சொன்னாங்கங்கிற விஷயம் வர்மாக்குத் தெரிய வந்துருக்கு ஆனா வீட்டுல யார்கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லல..தன் பொண்ணுங்களோட வாழ்க்கை பாதிக்கப்பட்டுரும்னு இரண்டு பேர் மேல இருந்த தப்பை மறைச்சு அந்த ட்ரைவரை மாத்தி வாக்குமூலம் கொடுக்க வச்சு கேஸ் பைலை க்ளோஸ் பண்ணிட்டார்.
அந்த அதிர்ச்சியில் இருந்தே நான் மீளாம இருக்க கீழே இருந்து யாரோ வந்த சத்தம் கேட்டு வேகமாய் போய் சுவத்துக்கு அந்தபக்கம் ஒளிஞ்சுகிட்டேன்.அப்போ தான் அந்த நம்பூதிரி வந்தான்.