(Reading time: 21 - 41 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

நிலைமைல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்.”

ஹா..பணக்காரங்களா இருக்குறது அத்தனை சுலபம் இல்ல போலேயே..எத்தனை பிரச்சனைகள்.சரி நீங்க போய் பார்த்துட்டு வாங்க.நம்ம ஹெல்ப் தேவைப்பட்டா கண்டிப்பா பண்ணலாம்.”

ஷுவர் சார்.”,என்றவள் அங்கிருந்து வெளியே வந்து தன் கண்ணாடியை அணிந்தவாறே காரை உயிர்பிக்க இந்த மனித மனங்களைப் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை விதமான மனிதர்களும் அவர்களின் எண்ணங்களும்.கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஒரு கூட்டம்.அவர்களை கடவுளாய் பாவிக்கும் மக்கள் ஒரு கூட்டம்.அரசியல் மற்றும் திரைப்படங்களை வைத்து முன்னெறும் ஒரு கூட்டம்,அந்த அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தங்கள் நாயகனாய் பார்க்கும் ரசிகர்கள் ஒரு கூட்டம்.

நாடு இந்த நிலைமையெனில் ஒரு வீட்டிற்குள்ளேயே சக உறவுகள் மீதான பொறாமை வன்மம் பேராசை கொண்ட ஒரு கூட்டம்.உண்மையான பாசத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி அதிலிருந்து ஆதாயம் பெரும் ஒரு கூட்டம்,யாரிடம் அன்பைக் கொட்ட வேண்டும் யாரைத் தள்ளி நிறுத்த வேண்டும் என்பதே புரியாத அறியாமை கொண்ட ஒரு கூட்டம்.

வாழ்க்கை எப்போதுமே அழகானதாக இருப்பதில்லை தான் அதிலும் இப்படி வண்ணங்களில்லா எண்ணங்களுக்குச் சொந்தகாரர்கள் தாங்களும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் அத்தனை அழகையும் கெடுத்து விடுகின்றனர்.

எந்த ஒரு மாற்றமும் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து தொடங்காத வரை மாற்றம் என்ற ஒன்று மட்டும் தான் மாறாமல் இருக்கும்.”

********முற்றும்********

Episode # 15

Go to Vannamillaa ennangal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.