அறைக்கு அழைத்துச் சென்றார்.
கைகளெல்லாம் நடுக்கமுற உள்ளே சென்றவருக்கு பயத்தில் தலைசுற்ற ஆரம்பிக்க அப்படியே மூர்ச்சையாகிச் சரிந்திருந்தார்.இதைச் சற்றும் எதிர்பாராத அமித்தோ உடனே ஓடிச்சென்று அவரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தார்.சிறிது நேரத்தில் கண் விழித்த சந்தியவோ அத்தனை அருகில் அவரைக் கண்டதும் பயந்து போய் அவசரமாய் எழுந்து கட்டிலின் பின் பகுதியில் தன்னை மறைத்துக் கொண்டார்.
அவரின் செயலில் மனம் நொந்த அமித்வர்மா ஒன்றும் கூறாமல் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொள்ள சற்று நேரத்தில் உறங்கியும் போனார்.அவர் உறங்கியதை உறுதி செய்துக் கொண்டவராய் வறண்டு போன நாவிற்குத் தண்ணீர் தேவை என்பது உணர்ந்து சத்தம் எழாதவாறு அமைதியாய் சென்று மேசையின் மீதிருந்த தண்ணீரை மொத்தமாய் கொட்டிக் கொண்டு அப்படியே ஓரமாய் அமர்ந்து கொண்டார்.
மறுநாள் காலை எழுந்த அமித் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர தனக்கு எதிர்புறத்தில் சுவற்றில் சாய்ந்து கால்களைக் குறுக்கியவாறு அமர்ந்திருந்த சந்தியாவைக் கண்டு மனம் இளகிப் போனார்.தன் மேல் இருந்த தவறு உறைக்கவே அவரருகில் சென்றவர் மெதுவாய் தட்டி அவரை எழுப்ப முயற்சி செய்தார்.
சில நொடிகளில் கண் விழித்தவளிடம் முதன்முறையாய் வாய்திறந்து பேசத் தொடங்கினார் அமித்.
“இங்கப் பாரு பயப்படாத..அவசரத்தில் நடந்துருந்தாலும் நடந்த கல்யாணம் பொய்னு ஆகாது.முதல்லயே நான் இதெல்லாம் உன்கிட்ட பேசிருக்கணும்.என்னைப் பத்தி யோசிச்ச அளவு உன்னை யோசிக்காம விட்டுட்டேன்.
தப்புதான்..அதுக்காக மன்னிப்பும் கேட்டுக்குறேன்.ஆனா நீ என்னைப் பார்த்து இப்படி பயப்படுற அளவுக்கு நான் கெட்டவன் இல்ல..ஒரு கணவனா உன்னைக் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்.எனக்குமே இந்த கல்யாணம் எதிர்பாராதது தான்.அதனால தான் முழு ஈடுபாடோட என்னால உன்கிட்ட பழக முடில.கொஞ்சம் எல்லாத்தையும் ஏத்துக்குறதுக்கான நேரத்தை கொடு..
ஆனா அதுவரை நீ நிம்மதியா இரு..இது தான் இனி உன் வீடு இது தான் நம்மளோட அறை.உன் விருப்பமில்லாம எதுவும் நடக்காது..என்னை நீ தாராளமா நம்பலாம்..சரியா?”,என்று சிறு குழந்தைக்குச் சமாதானம் கூறுவதைப் போன்று கூறிக் கொண்டிருந்தார்.
அனைத்தையும் கேட்டவள் புரிந்தும் புரியாததுமாய் தலையை ஆட்டி வைத்தாள்.அதன் பின்னான இரு தினங்களில் ஓரளவு திடத்தை வர வைத்துக் கொண்டாள் சந்தியா.வேலை என்று பெரிதாய்