Page 9 of 9
"நீ யோசி. நல்லா யோசிச்சு முடிவெடு. உன் வாழ்க்கையின் அந்த சில நாட்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனா நீ என்கூட வாழ்ந்தா உன் எதிர்காலம் எந்த கவலையும் இல்லாமல் இருக்கும்னு என்னால வாக்கு தர முடியும். எமோஷனல்லா இருக்கும் பொது எந்த முடிவும் எடுக்க கூடாது. நீ எவ்ளோ நாள் வேணாலும் டைம் எடுத்துக்கோ. உனக்கு புடிக்கலைனாலும் பரவலை. தைரியமா என்கிட்டே சொல்லு. ஆனா எந்த காரணத்தை கொண்டும் நீ மறுபடியும் சாக முயற்சி பண்ணக்கூடாது. சத்தியம் பண்ணு" என்றவர் அவளை நோக்கி தன் கையை நீட்ட அதில் தன் கையை வைத்து சத்தியம் செய்தாள்.
ஒரு புன்னகையுடன் "உடம்பை பார்த்துக்கோ. நான் ஈவினிங் வந்து பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு செல்லும் சுந்தரத்தையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் லட்சுமி.
தொடரும்