ஜன்னல் கதவு வழி வந்த சூரிய வெளிச்சம் மெல்ல ஒளியை கொண்டு வர முயன்று கொண்டிருந்தது. என்ன இடம் இது என புரியவில்லை அவளுக்கு... மெல்ல மெல்ல தான் சென்னையை நோக்கி பயணப்பட்டது அவளின் நினைவுகளில் வந்தது.
"சார்...சென்னை வந்தாச்சா?" அவள் குரல் தீனமாக ஒலித்தது.
"அங்கிருந்த இரண்டு பெண்கள் அவள் அருகே வந்து ஏதோ பேசினார். அவர்கள் பேசும் மொழி அவளுக்கு புரியவில்லை. அவள் ஒன்றும் புரியாமல் முழிப்பதை கண்ட மற்றொரு பெண் வெளியே சென்று வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்தாள்.
"என்னம்மா இப்போ எப்படிக்கிது...பானி வேணுமா?" கொச்சை தமிழில் அவள் பேசினாள். அவள் கை அசைவில் பானி என்றால் தண்ணீர் என புரிந்தது லக்ஷ்மிக்கு. ஆமாம் என அவள் தலை அசைக்க அந்த பெண் ஒரு அழுக்கு படிந்த குவளையில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
அதை குடித்து முடித்தவளுக்கு அப்போது தான் பார்வை சற்று தெளிவானது.
"இது சென்னையா?" என அப்பாவியாக கேட்டவளை அந்த பெண் பரிதாபமாக பார்த்தாள்.
அவள் அருகே அமர்ந்த அந்த பெண், "நீ இங்க வந்து ரெண்டு நாளா மயக்கம் ஆயிடுச்சு. சாப்பாடு கொண்டு வர சொல்லுறேன்" என்றவள் அருகிருந்த பெண்ணை பார்த்து மீண்டும் அந்த புரியாத மொழியில் ஏதோ சொல்ல அந்த பெண் அங்கிருந்து வெளியே சென்றாள்.
"இது சென்னையா அக்கா?" மீண்டும் லக்ஷ்மியின் கேள்வியில் அந்த பெண் அவளை அதே பார்வை பார்த்தாள்.
"இது பம்பாய். நீ இருக்கற இடம் சொர்க்கம்னு சொல்லுவாங்கோ" என சொல்லி விரக்தியாக சிரித்தாள்.
"ஆனா நமக்கு இல்லை...." அவளின் கண்களில் ஒரு சோகம் இருந்தது.
அதற்குள் வெளியே சென்ற பெண் தட்டில் உணவுடன் வந்தாள். லக்ஷ்மிக்கு பசி வயிற்றை கிள்ளியதால் அந்த உணவு என்ன என கூட பார்க்காமல் கடகடவென உள்ளே சென்றது.
சாப்பிட்டு முடித்தவள், "நீங்க எல்லாம் இங்க வீட்டு வேலை செயிரிங்களா?" மீண்டும் அப்பாவியாக கேட்க, "வீட்டு வேலையா....ஹஹஹஹ" என அந்த பெண் பெரிய சத்தத்தில் சிரிக்க, லக்ஷ்மிக்கு பயம் வந்தது.
அதற்குள் தடித்த பெண் ஒருத்தி அந்த அறைக்குள் நுழைந்தாள். மற்றொரு பெண் சிரிப்பதை நிறுத்தி விட்டு எழுந்து நின்றாள்.
"என்னம்மா எளுந்திட்டியா? அந்த ஆளு ஏதோ கொஞ்சமா மயக்க மருந்து கொடுத்தேன்னு சொன்னான். அதுக்கே நீ ரெண்டு நாளா மயங்கி கிடக்கிற...ரொம்ப வீக் இந்த பொண்ணு... நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து...நாலு கஸ்டமர்...பெரிய பெரிய ஆளுங்கோ...உன்