சுயநினைவு இல்லாத அந்த நிலையில் கூட அவனை 'அப்பா' என்றுதானே அழைத்தாள். அந்த நிலையில் கூட அவளுடைய மனதில் அவன் இல்லை என்பது தெரிந்து விட்டது.
மற்றபடி இவளாவது காதலாகிக் கசிந்துருகுவதாவது. அதாவது இவளுக்கு அந்த விஷயம் என்றால் என்னவென்றே தெரியாது. சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிக் கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தில் இவளை ஒருபோதும் நம்ப மாட்டேன் என்று அவன் தீர்மானித்தான்.
அதே சமயத்தில் அதிதியும் கவலையாகினாள்.
'எவ்வளவு உணர்வு பொங்க அவனிடம் அழகாக பேசினாலும் அவன் அப்படியே பட்டும்படாமலும் பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு வார்த்தை கூட அவன் மனதை தொட வில்லையா 'என்று யோசித்தாள்.
இல்லை, அவளுக்கு இன்னும் இதில் போதுமான பயிற்சி இல்லை. அதுதான் குறை…! இன்னும் சிறப்பாக இந்த பொறுப்பை செய்ய வேண்டும். இன்னும் வலுவாக திட்டமிட வேண்டும் என்று தீர்மானித்தாள்.
தொடரும்
Next episode will be published on 21st Apr. This series is updated weekly on Tuesday Evenings.