தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 10 - பத்மினி செல்வராஜ்
பொழுது இன்னுமே நன்றாக புலர்ந்திராத புத்தம் புது காலையில், அந்த திருமண ஹாலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மணமக்கள் இருவர் பக்கமும் நிறைய சொந்தங்கள், தெரிந்த நண்பர்கள் என இருப்பதால், அனைவருமே அந்த திருமணத்திற்கு வருகை தந்திருக்க, அதனால் கூட்டம் அதிகமாகி இருக்க, அந்த திருமண ஹாலே நிரம்பி வழிந்தது.
அந்த ஹாலின் ஓரமாக போடப்பட்டிருந்த மணமேடையில் தேவலோகத்து இந்திரனும் இந்திராணியையும் போன்ற தெய்வாம்சம் பொருந்திய தோற்றத்தில் அமர்ந்து இருந்தனர் மணமக்கள் பவித்ரன் மற்றும் மிருணாளினி.
மணமகனாகிய பவித
...
This story is now available on Chillzee KiMo.
...
கலந்து கொள்ளாமல் தங்கள் மகள் செய்த தவறுக்கு தங்களுக்கு தண்டனை கொடுத்து தங்களை அவர்களாகவே ஒதுக்கி கொண்டனர்.
அப்படி அடிபட்டு காயப்பட்டு இருந்தவர்களுக்கு இப்பொழுது தங்கள் இளைய மகளை இப்படி