சிரிப்பையும் தந்து சென்றாள்... அப்படியே ‘பாட் லக்’கிற்காக கொண்டு வந்திருந்த இனிப்பையும் கையோடு எடுத்துச் சென்றாள்...
அவள் தன்னை ‘டீஸ்’ செய்வது உணர்ந்து புன்னகைத்த மனோஜின் மனம் முழுக்க உல்லாசம் நிறைந்திருந்தது...
பல மாதங்களுக்கு பிறகு மனைவியுடன் கழித்த முன் தின இரவு அவனுக்கு கூடுதல் மயக்கத்தை கொடுத்திருந்தது...
மஞ்சுவை முதல் முதல் பார்த்ததும் எப்படி மயங்கினானோ, அதே மயக்கம் இப்போதும் அவனிடம் இருந்தது.
“ஹலோ மனோஜ்...” என்று அசோக் அவனருகே வந்து பேசத் தொடங்கவும், மனோஜ் அசோக் பேச்சில் கவனத்தை செலுத்த முயன்றான்...
ஆனாலும் அவனின் கண்கள் அவ்வப்போது மற்ற பெண்களுடன் கதைப் பேசிக் கொண்டிருந்த மஞ்சு பக்கம் சென்று வரத் தான் செய்தது...
மஞ்சுவும் கிட்டத்தட்ட அதையே தான் செய்துக் கொண்டிருந்தாள்... மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவளால் மனோஜ் பக்கம் தானாக செல்லும் தன் கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை...
கௌரவின் மனைவி புனிதா,
“சப்பாத்தி செய்ய வேண்டியது எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்...” என்று பொதுப்படையாக சொல்லவும், மஞ்சுவிற்கு அதன் பின்னால் இருக்கும் செய்தி புரியவில்லை...
ஆனால் மற்றவர்கள் பலத் தடவை கௌரவ் வீட்டு விழாக்களுக்கு வந்து பழகி இருந்ததால், எல்லோருமாக சேர்ந்து சப்பாத்தி செய்வதற்கான செய்தி அது என்பதை புரிந்துக் கொண்டார்கள்... அதனால் சப்பாத்தி செய்யும் ஒரு வேலையை பல சிறு வேலைகளாக பிரித்து, ஒவ்வொருவர் ஒவ்வொரு வேலை என எடுத்துக் கொண்டார்கள்...