கௌரவை அடித்து துவைத்து எடுத்திருக்காமல், ஒரு அடிக் கூட கொடுக்காமல் வந்தது அவனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது... மஞ்சுவைப் பற்றி அவனிடமே அப்படி பேச வேண்டுமென்றால் கௌரவ் என்ன மாதிரியான கீழ்த்தரமானவனாக இருப்பான்...
மஞ்சு ஒருப் பக்கம், மனோஜ் ஒருப்பக்கம் என இருவருமே தங்கள் கோபத்தை மனதுக்குள் வைத்து உழன்றுக் கொண்டிருந்தார்கள்...
கார் மட்டும் இலையுதிர் காலதிற்கான கரும் இருளில் சீராக சென்றுக் கொண்டிருந்தது...
திடீரென ஒரு மான் சாலையின் குறுக்கே ஓடவும், மனதில் சஞ்சலம் இருந்தாலும் கவனத்துடன் காரை ஒட்டிக் கொண்டிருந்த மனோஜ் சடன் ப்ரேக் போட்டான்... அப்போதும் மான் காரை உரசிக் கொண்டு தான் சாலையின் மறுப்பக்கம் சென்றது!
சாலையில் கவனம் வைக்காமல் இருந்த மஞ்சு, காரில் ஏதோ பட்டதால் பயந்துப் போனவளாக,
“என்ன மனோஜ் அது...” என்றாள் திகிலுடன்...
“மான் pbs... வேற ஒண்ணுமில்லை...” என்று அமைதியாக சொன்னாலும் மனோஜின் இதயத்துடிப்பும் கூட வேகமாகி தான் இருந்தது...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... சடன் ப்ரேக் கொடுத்த அதிர்ச்சியிலும், மயிரிழையில் தப்பித்த மான் சொன்ன வாழ்க்கை பாடத்தினாலும், அவர்களிடம் சற்று முன் இருந்த கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது...
“நல்ல வேளை பின்னாடி வேற கார் வரலை...” என்றபடி காரை மீண்டும் கிளப்பினான் மனோஜ்...
கார் சீரான வேகத்தை அடைந்ததும், மனோஜ் எப்படி கௌரவ் பற்றி மஞ்சுவிடம் பேசுவது