மஞ்சுவும் மற்றவர்களைப் போல தனக்கான வேலையாக ஸ்டவ்வில் சப்பாத்தி போட்டு எடுக்கும் வேலையை எடுத்துக் கொண்டாள்...
புனிதா அங்கே ஹாயாக அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தது அவளின் கருத்தை கவர்ந்தது... மஞ்சு பல ரகமான கெட் டுகெதர்களுக்கு சென்றிருக்கிறாள்... இப்படி வந்திருக்கும் விருந்தாளிகளிடம் வேலையை ஒப்படைத்து ஹாயாக இருப்பவளை இப்போது தான் பார்க்கிறாள்...
சிலர் புனிதாவை உச்சிக் குளிர வைக்கும் விதத்தில் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருப்பதும் அவளின் கவனத்தில் பட்டது...
இது போன்ற ஐஸ் வைப்பவர்கள், அதை விரும்புபவர்கள் இரண்டுமே மஞ்சுவிற்கு பிடிக்காத வகையான மக்கள்... அதனால் மரியாதை நிமித்தம் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், முள்ளின் மேலே நிற்பவளாகவே அங்கே இருந்தாள்...
ஒரு வழியாக சப்பாத்தி செய்யும் வேலை வெற்றிகரமாக முடியவும், எல்லோரும் அந்த சப்பாத்திகளை காலி செய்யும் வேலையில் இறங்கினார்கள்...
சாப்பிட்டு முடித்ததும் கிளம்பி விடுவது என்ற எண்ணத்துடனே இருந்த மஞ்சு, மனோஜ் தன் பேப்பர் பிளேட்டை குப்பைத் தொட்டியில் போட்டானோ இல்லையோ, அவனருகே சென்று,
“கிளம்பலாமா மனோஜ்...” என்றாள்...
மனோஜ் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்... ஆனாலும், அவளின் முடிவை மறுக்காமல்,
“சாப்பிட்டு உடனே கிளம்பினா சரியா இருக்காது pbs... ஒரு அஞ்சு நிமிஷம் போனதும் கிளம்பலாம்...” என்றான்...
அவன் சொல்வதும் சரி என்று தோன்றியதால், மஞ்சுவும் ஏற்றுக் கொண்டாள்...