“அதெல்லாம் எனக்கும் புரியுது மனோஜ்... ஆனால் அந்த கோபத்தை என் கிட்ட காட்டினீங்க பாருங்க அது தான் என்னால தாங்கிக்க முடியலை... என் மனோஜ் வேற யார் மேலேயோ இருக்க கோபத்தை என் கிட்ட காட்டுறார்ன்னு என்னால நம்பக் கூட முடியலை... நான் உங்க கிட்ட என்ன பேசினாலும் எரிஞ்சு விழுந்தீங்க... கத்தினீங்க... நான் உங்க மனைவி மனோஜ்... உங்க கஷ்ட நஷ்டத்துல பகிர்ந்துக்குறவ... நீங்க இப்போ மனசு விட்டு பேசுற மாதிரி அப்போ பேசி இருந்திருக்கலாமே... எதுக்கு என்னை அப்படி டஸ்ட்-பின் மாதிரி கோபத்தை காட்ட யூஸ் செய்தீங்க???”
“pbs, நான் அந்த மாதிரி எப்போவும் செய்றவன் கிடையாது. வேலையினால ஓவர் ஸ்ட்ரெஸ் pbs... நீ சொன்னது போல உன் கிட்ட பேசி இருந்திருக்கனும்... அதை செய்யாதது தப்பு தான்...”
“அப்போ என் கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தது தப்பு இல்லையா???”
“அதுவும் தப்பு தான்...”
“என்ன எல்லாம் சொன்னீங்க?! அறிவிருக்கா? எனக்கே எல்லாம் தெரியும்! நீ சொல்லி எனக்கு எதுவும் தெரிய வேண்டியது இல்லை! இன்னும் எவ்வளவோ! அது எல்லாம் போதாதுன்னு கடைசியா அடிக்க வேற வந்தீங்க...”
“pbs!” மனோஜ் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
மஞ்சு அவனை தடுக்கவில்லை ஆனால் பேச்சையும் நிறுத்தவில்லை.
“நான் உங்க மனைவி மனோஜ். உங்களுக்கு பிரச்சனைனா அது எனக்கும் பிரச்சனை தான். நான் உங்களை என்னுடையவரா பார்த்தேன், நீங்க மட்டும் எதுக்கு என்னை அந்நியமா நினைச்சு கோபத்தை மட்டும் காட்டுனீங்க?”
“நான் யோசிச்சு ப்ளான் செய்து எதையும் செய்யலை pbs. தப்பு தான். நான் அப்படி செய்திருக்க கூடாது... தப்பு தான்...”