“ரொம்ப கஷ்டமா இருந்தது மனோஜ்... எங்கே உங்களை மொத்தமா வெறுத்திடுவேனோன்னு கூட பயமா இருந்தது... நான் வேலைக்கு போய், உங்களுக்கு சரிசமமா இருந்திருந்தா இப்படி ட்ரீட் செய்திருக்க மாட்டீங்களோன்னு நினைக்காம இருக்க முடியலை...”
“pbs...!” என்றான் மனோஜ் அதிர்ந்துப் போனவனாக...
“பின்ன அடிக்க நினைக்குற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? இவ்வளவு வருஷத்துல நான் அமுதா கிட்ட எனக்குன்னு ஒரு சின்ன ஹெல்ப் கூட கேட்டது கிடையாது... உங்களுக்காகன்னு தான் நான் அவக் கிட்ட கேட்டேன்... நான் உங்களுக்குன்னு யோசிச்சு எல்லாம் செய்ய, நீங்க மட்டும் எதுக்கு உங்களை தனியா என்னை தனியா யோசிச்சு எல்லாம் செய்றீங்க???”
“pbs! எப்படி பார்த்தாலும் நான் கையை அடிக்க தூக்கி இருக்க கூடாது... அதை நான் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது... சாரி டா... இதுக்கு மேல எப்போவுமே ஒரு கஷ்டம், ஒரு கோபம்னா உன் கிட்ட மனசு விட்டு பேசுவேனே தவிர, கோபத்தை மட்டும் காட்ட மாட்டேன்...”
“நான் உங்க அளவுக்கு ஸ்மார்ட் ஆனவளா இல்லாம இருக்கலாம்... ஆனாலும் நீங்க சொன்னா புரிஞ்சுப்பேன்...”
“ஹேய்... இப்போ எதுக்கு இதை சொல்ற??? நான், மஞ்சு நீ சூப்பர் ஸ்மார்ட்ன்னு சொல்ல தானே???”
“ஏன் சொன்னால் என்ன???”
மஞ்சு முகத்தை நிமிர்த்த எல்லாம் இல்லை... ஆனாலும் அவளின் இதழ்களில் பூத்திருந்த புன்னகையை மனோஜால் உணர முடிந்தது... அவன் மனமும் லேசாக...
“சொல்லலாமே... சொல்லாமல் என்ன? என் மஞ்சு சூப்பர் சூப்பர் ஸ்மார்ட்... அவளை தவிர வேற யாராவது இருந்திருந்தா, இந்நேரம் காச் மூச்ன்னு கத்தி சண்டைப் போட்டு வீட்டையும்