(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

எங்கேயும் போகவும் மாட்டா..."

  

காஞ்சனாவின் குரலில் இருந்த பெருமையை கவனித்த சஞ்சீவ், அண்ணனின் காதல் பற்றி தெரிந்தப் போது இதே அம்மா செய்த ஆர்பாட்டங்கள் நினைவுக்கு வரவும்,

  

"இதுக்கு தான் அம்மா லவ் மேரேஜ் செய்துக்கணும்... பாருங்க அண்ணி அண்ணனையும் நல்லா பார்த்துக்குறாங்க, உங்க கிட்டயும் அன்பா மரியாதையா நடந்துக்குறாங்க..." என்றான் நக்கலாக!

  

காஞ்சனா அவனுக்கு கோபமாக பதில் சொல்லும் முன், சஞ்சீவ் சொல்வதைக் கேட்டபடி வந்த கீதா,

  

"என்ன சஞ்சீவ், இன்னைக்கு நான் தான் உங்களுக்கு விளையாட கிடைச்சேனா?" என்றாள்.

  

அனைவருக்கும் சிரிப்பு உதட்டில் தோன்றும் என்றால் கீதாவிற்கு அது மொத்த முகத்திலுமே பிரதிபலிக்கும்! அவளின் முக மலர்ச்சியை பார்த்தாலே அவளின் எதிரிள் இருப்பவருக்கும் மனதில் ஒரு நிறைவு தோன்றும்! பச்சை பசேலென்ற புல் வெளியைப் பார்க்கும் போது, சிறுக் குழந்தையின் சிரிப்பை பார்க்கும் போது எல்லாம் தோன்றும் ஒரு வித இனிமை கலந்த உணர்வு கீதாவின் அருகே இருக்கும் போதும் வரும்... அது அவளின் ஸ்பெஷாலிட்டி! அவளிடம் அப்படி ஒரு பாசிடிவ் aura இருந்தது!

  

இப்போதும் சாதாரண மெரூன் நிற சிப்பான் சேலையிலேயே அழகாக தெரிந்தாள்!

  

மருமகளைக் கண்ட உடன் காஞ்சனாவின் முகமும் மலர்ந்தது...

  

"வாம்மா கீதா, சஞ்சீவ் விளையாட்டுத்தனமா சொன்னாலும் உன்னைப் பத்தி சொன்னது எதுவும் தப்பு இல்லை. உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க எங்க குடும்பமே கொடுத்து வச்சிருக்கணும். அடுத்து வருபவளும் இதே போல இருந்தா நல்லா தான் இருக்கும். என் தம்பி மகள் கண்மணி..."

  

இப்போது சஞ்சீவ் அவசரமாக குறுக்கிட்டான்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.