பொறுமையா பேசினால் என்ன? பாவம் அத்தை, மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும் தானே?" என்றாள்!
காரை கிளப்பிய சஞ்சீவ், அண்ணியிடம்,
"அம்மா பாவம் தான், இல்லன்னு நானும் சொல்லலை அண்ணி... அப்பா மட்டும் எங்களுக்காக பணம் வச்சிட்டு போயிருக்காவிட்டால் ரொம்ப கஷ்டம் தான்... அம்மா சொல்வதுப் போல் மாமா உதவி செய்திருக்கிறார் தான்.. அதற்காக கண்மணியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? நாங்க ஊருக்குப் போகும் போது அம்மாவோட அக்கா பசங்களும் வருவாங்க... அவங்களோட நானும், ராஜீவும், கண்மணியும் சேர்ந்து விளையாடுவோம்.. அவங்க எல்லோரும் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்... ஆனால் கண்மணி மட்டும் அப்படி இல்லை என்றால் எப்படி? சின்ன வயசில் இருந்தே எனக்கு அவள் மேல் ஒரு ப்ரதர்லி பாசம் தான்... அம்மா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க... நீங்க தான் அண்ணி அவங்களுக்குப் புரிய வைக்கணும். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா, அண்ணி. எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை... இப்போ பாருங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்... எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ்.. எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு.. எனக்கு பிடிச்ச நேரம் தூக்கம்... பிரௌஸிங் etc etc... இதெல்லாம் எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்..." என்று விலாவரியாக விளக்கம் கொடுத்தான்!
இவ்வளவு நேரம் சஞ்சீவ் சொல்வதைக் கேட்டபடி இருந்த கீதா... அவனின் கடைசி வாக்கியத்தைக் கேட்டு அதிசயமாகப் பார்த்தாள்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தப் போதும் அண்ணியின் முக மாறுதலை உணர்ந்தவனாக கேள்வியாக அவளைப் பார்த்தான் சஞ்சீவ்!
ஒன்றுமில்லை என்பதுப் போல் தலை அசைத்து புன்னகை செய்த கீதா,
"என்னோட ஃபிரெண்ட்ஸ் பத்தி சொல்லி இருக்கேன் தானே... இப்போ கூட நான் பார்க்க போறேனே... அதில ஒருத்திக்கு இன்னும் கல்யாணம் ஆகலை... அவ அம்மா என் கிட்ட நீ சொன்னா இந்து கட்டாயம் கேப்பான்னு கல்யாணம் பத்தி பேச சொன்னாங்க... சரின்னு