(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

போனை வைத்து விட்டு சஞ்சீவிடம்,

  

"இந்து வர கொஞ்சம் லேட் ஆகுமாம்... ஆஃபீஸ்ல வெயிட் பண்ண சொன்னாள்... சாரி சஞ்சீவ், உங்களை வேற தொல்லை பண்றேன்..." என்றாள் கீதா.

  

"அதெல்லாம் இல்லை அண்ணி.... என்ன ஆனாலும் உங்க இந்துவ இன்னைக்கு நான் மீட் பண்ணியே ஆகணும்... ஆனால் அண்ணி... என்னை ஏன் இப்படி நீங்க வாங்கன்னு மரியாதையோடுப் பேசுறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு... நார்மலா பேசுங்களேன்???"

  

"என்ன செய்ய, நானும் முயற்சி செய்து தான் பார்க்கிறேன்... அதென்னவோ எனக்கு எல்லோரையும் அப்படி பேசியே பழக்கம் ஆகிடுச்சு..."

  

"பொய் சொல்லாதீங்க, உங்க ஃபிரெண்ட்ஸ எல்லாம் பேர் சொல்லி நீ வா போன்னு தானே பேசுறீங்க?"

  

"அது சின்ன வயசுல இருந்து பழக்கம் ஆகிடுச்சு... நீங்க எங்களுக்கு கல்யாணம் ஆன உடனேயே mba படிக்கப் போயிட்டீங்க... எனக்கு கொஞ்சம் டைம் வேணும்ல?"

  

"சரி, உங்களுக்கு இருபத்தி நாலு மணி நேரம் தரேன்... அதுக்கு அப்புறமும் என்னை இப்படி நீங்க வாங்க ன்னு பேசினால் உங்க பேச்சு கா விட்ருவேன்..."

  

"சரிங்க சஞ்சீவ் சார், முயற்சி பண்றேன்... உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்...!"

  

அதற்குள் அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்!

  

எஸ் கம்பெனீஸ் என்று பெயர் தாங்கிய அந்த வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு சஞ்சீவ், கீதா இருவரும் இறங்கினார்கள்.

  

"அண்ணி, அண்ணன் உங்கள இங்க டிராப் பண்ணலைன்னு உங்களுக்கு கோபம் இல்லையா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.