(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

பேசினால், அவளும் ஆல்மோஸ்ட் நீங்க இப்போ சொன்ன அதே தான் சொன்னாள்... ஆனால் என்ன, அவள் சொன்னது எல்லாம் ரொம்ப ப்ரோஃபெஷ்னல் ரீசன்ஸ்... இந்த தூக்கம் டிரஸ் மாதிரி இல்லை..." என்றாள்!

  

"என்ன அண்ணி கிண்டல் பண்றீங்களா? சரி அது இருக்கட்டும் இன்னைக்கு உங்க ஃபிரெண்ட் வீணாக்கு தானே பிறந்த நாள். அப்புறம் ஏன் இந்துவோட கம்பனிக்கு இப்போ போறீங்க?"

  

"இந்துக்கு ஏதோ முக்கியமா வேலை இருக்குன்னு சொன்னாள்... எப்படியும் நாங்க மூணுப் பேரும் எதாவது இடத்தில மீட் பண்ணி தான் ஆகணும். சரி, இந்து கம்பனிலேயே மீட் பண்ணலாமுன்னு முடிவு செஞ்சோம்."

  

"ஆனாலும் அண்ணி, உங்களோட இந்த ஃபிரெண்ட்ஷிப் ரொம்ப வித்தியாசமா இருக்கு... இப்படி கல்யாணம் ஆனப் பிறகும் எல்லா பெண்களும் நட்பை தொடர்வது இல்லை தானே..."

  

"அது உண்மை தான்... ஆனால் எங்களோட நட்பு அப்படி சாதாரணமானது இல்லை, சஞ்சீவ்... நாங்க மூணுப் பேரும் சின்ன வயசில இருந்தே ஃபிரெண்ட்ஸ் தான்... மூணு பேருல நான் தான் பெரியவள்... இந்துக்கும் வீணாக்கும் என்னை விட ரெண்டு வயசு கம்மி..."

  

"இதுவே வித்தியாசம் தான். சாதரணமா எல்லோரும் கூடப் படிக்கிறவங்க கூட தானே நட்பா இருப்பாங்க ???"

  

"நான் சொல்லி இருக்கேன் இல்லையா, எங்க மூணுப் பேர் வீடும் வரிசையா ஒரே தெருவில இருக்கும்... மூணு குடும்பமும் கிட்டதட்ட ஒரே நேரத்தில தான் அந்த காலனிக்கு கூடி வந்தது... அப்போ அந்த காலனி அவ்வளவு இம்ப்ரூவ் ஆகி இல்லை. அதனால வீட்டில விளையாடினாலும் நாங்க மூணு பேரும் தான் விளையாடுவோம்.. அதே போல் ஸ்கூலுக்கு போகும் போதும் கூட அவங்க ரெண்டு பேரும் அக்கா அக்கா ன்னு என் கூடவே தான் வருவாங்க.. அப்புறம் ஒரே காலேஜ்..."

  

"கேட்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, அண்ணி... ஆனால், உங்க கல்யாணம் அப்போ உங்க ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தங்க தானே உங்க கூட இருந்தாங்க?"

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.