நான் இல்லைனால் என்ன செஞ்சிருப்பீங்க?" என்று கீதாவிடம் விசாரித்தான் சஞ்சீவ்.
"கோபம் எல்லாம் இல்லை. அவருக்கு வேலை இருக்குன்னு தெரியும்... நீங்க இல்லைன்னா நானே டிரைவரை டிராப் செய்ய சொல்லி இருப்பேன்.. இல்லைன்னா வீணாவோ இந்துவோ நம்ம வீட்டுக்கு வந்து என்னை பிக்கப் செய்திருப்பாங்க..."
"ஒ!"
"உங்களுக்கு அவசரமா வேலை இருந்தால் கிளம்புங்க... இல்லை என்றால் உள்ளே வாங்க... இந்துவும், வீணாவும் வர வரைக்கும் வெயிட் பண்ணலாம்..."
"ஆஹா, உங்களை இப்படியே விட்டுட்டுப் போய் அப்புறம் அண்ணன் கிட்ட யார் திட்டு வாங்குறது... உங்க ஃபிரெண்ட்ஸ் வந்தப்புறம், அவங்க கிட்ட உங்களை பத்திரமா ஒப்படைச்சிட்டு தான் நான் நடையை கட்டுவேன்..."
"அப்போ சரி... வாங்க... வீணா வந்தாச்சு போல இருக்கே... அவளோட பென்ஸ் தான் இது..." என்று ஒரு சிவப்பு நிற பென்ஸ் காரைக் காட்டினாள் கீதா.
பென்ஸ் காரின் மதிப்பு உணர்ந்தவன் என்பதால், வீணாவும் பணக்காரப் பெண் தான் என நினைத்துக் கொண்டான் சஞ்சீவ்.
ஆபீஸ் வரவேற்பறையில் இருந்தப் பெண் கீதாவை பார்த்ததும் மரியாதையாக எழுந்துக் கொண்டாள்.
"மேடம் வர ஒரு ஐந்து நிமிஷம் ஆகும்னு சொன்னாங்க..."
"இந்து எனக்கும் போன் செய்தாள். வீணா இங்கே வந்தாளா?" என்று அவளிடம் கேட்டாள் கீதா!
"ஆமாம் மேடம், உள்ளே அவங்க ஃபிரெண்ட் கவியை பார்க்க accounts செக்க்ஷன் போய் இருக்காங்க..."