(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஐயோ அம்மா, திரும்ப ஆரம்பிக்காதீங்க. கண்மணி எனக்கு ஒரு தங்கை மாதிரி... இந்த மாதிரி பேசுறதை இத்தோடு நிறுத்துங்க... அண்ணி நீங்க ரெடியா? போலாமா?: என்று கீதாவிடம் பேசி பேச்சையும் திசை திருப்பினான்!

  

ஆனாலும் காஞ்சனா விடுவதாக இல்லை! மகனிடம் அவளே பேசினாள்!

  

"டேய், இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்... சரி அதை விடு ஏதோ வெளிநாட்டுல இருந்து யாரோ வராங்கன்னு சொன்னியே கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணிட்டு போக கூடாதா? இன்னைக்குமா இந்த ஜீன்ஸும் டீ ஷர்டும்? அதுவும் மஞ்சள் கலர்ல ஷர்ட்?"

  

"இது எல்லாம் ரொம்ப ஓவர் அம்மா... ஏதோ அவங்க வர்ராங்கன்னு நான் என் தூக்கத்தை தியாகம் செஞ்சதே பெரிசு... வாங்க அண்ணி நாம கிளம்புவோம்... பை மம்மி...” என்று சொல்லி சஞ்சீவ் வாசல் நோக்கி நடக்க, கீதா காஞ்சனாவிடம்,

  

"சரி அத்தை, நானும் போயிட்டு வரேன்... ஏதாவது வேணும்னா என் மொபையிலுக்கு போன் போடுங்க... காலையில போட வேண்டிய மாத்திரை இதோ இருக்கு... மதியம் போட வேண்டியதை எடுத்து உங்க ரூம் டேபிள் மேல வச்சிருக்கிறேன்.  கலாவிடமும் சொல்லி இருக்கேன்." என்றாள்.

  

"அதெல்லாம் சரி தான் கீதா, நான் என்ன குழந்தையா? நீ உன் ஃபிரெண்ட்ஸ் கூட சந்தோஷமாக டைம் பாஸ் பண்ணிட்டு வா..."

  

"சரி அத்தை, நான் வரேன்..."

  

தற்குள் காரை கிளப்பி விட்டு பொறுமை இன்றி ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

  

காரின் கதவை திறந்து அமர்ந்த கீதா,

  

"அடடா சஞ்சீவ் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்... அம்மா கிட்ட கொஞ்சம் அன்பா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.