(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஆமாம் சஞ்சீவ். உங்களுக்கு அதுக் கூட ஞாபகம் இருக்கா? கல்யாணத்துல என்னோட இருந்தவ தான் வீணா... எங்க கல்யாணம் தான் எதிர்பார்க்காமல் தீடிர்னு ஒரு வாரத்தில் முடிவாகி நடந்ததே... அப்போ இந்து பிசினஸ் விஷயமா வெளியூரில் இருந்தாள்... ரொம்பவே முக்கியமான வேலை.. அதனால் நான் தான் முடிச்சுட்டு வர சொன்னேன்... நீங்க இந்துவைப் பார்த்தது இல்லைத் தானே? இன்னைக்கு உங்களுக்கு இன்ட்றோட்யூஸ் செய்றேன்.  படிச்சு முடிச்ச உடனேயே வீணாக்கு கல்யாணம் ஆயிடுச்சு...அவளுக்கு இப்போ ரெண்டு வயசில ஒரு குழந்தை இருக்கு... இந்து தான் அடம் புடிச்சிட்டு இருக்கா... ஆனால் சஞ்சீவ், இந்து மாதிரி ஒரு நல்லப் பொண்ணு மனைவியா வரக் கொடுத்து வச்சிருக்கணும்.. யாருக்கு அந்த லக் இருக்கோ..."

  

"என்ன அண்ணி பயங்கரமா பில்ட் அப் கொடுக்கீறீங்க? என்ன இந்த ஃபாரின்ல எல்லாம் செய்யற மாதிரி எங்க ரெண்டு பேரையும் அறிமுகப் படுத்தி மேட்ச் பண்ணப் போறீங்களா?"                                                                   

  

தன்னையும் அறியாமல் வாய் விட்டு சிரித்தாள் கீதா...

  

"நல்ல ஐடியா தான்... ஆனால் இந்து ரொம்ப சென்ஸிடிவ்... நீங்க ரொம்ப கேஷுவல். அவள் எல்லா விஷயத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துப்பா. நீங்க அப்படியே தலை கிழே...  இப்படி நிறைய சொல்லலாம்.. அதுவும் இல்லாமல், அத்தையைப் பகைச்சுக்க நான் தயாராயில்லை... அதனால நீங்க கவலைப் பட வேண்டாம். எனக்கு மேட்ச் மேக்கிங் ஐடியா எல்லாம் இல்லை..."

  

அப்போது கீதாவின் மொபைல் போன் அடித்தது... கீதா எடுத்துப் பேசினாள்!

  

"...."

  

"ஒ நான் பக்கத்தில வந்தாச்சு..."

  

"...."

  

"இல்லை பிரச்சனை இல்லை நீ மெதுவா வா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.