(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ஒ, சரி தேங்க்ஸ்..." என்ற கீதா, சஞ்சீவ் பக்கம் திரும்பினாள்.

  

"சஞ்சீவ், கவி எங்க ஸ்கூல படிச்சவள். நானும் கவியைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. போய் பார்த்துட்டு வரேன், நீங்க... இல்லை நீ, இங்க வெயிட் செய்றதை விட..."

  

கீதா முடிக்கும் முன்,

  

"நீங்க பேசிட்டு, உங்க வீணாவோட வாங்க... அப்புறம் தான் நான் கிளம்புவேன்." என்றான் சஞ்சீவ்!

  

"சரி, அப்போ இங்கேயே வெயிட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் கீதா.

  

அவளை யாரும் தடுக்காததில் இருந்து எஸ் எ கம்பெனியின் ஒரே வாரிசின் உயிர் தோழிகளுக்கு இங்கு தனி மரியாதை உண்டு என்பதை உணர்ந்துக் கொண்டான் சஞ்சீவ். அவன் எண்ண ஓட்டத்தை தடை செய்வதைப் போல் அவன் முன் பழச் சாறு நீட்ட பட்டது. அதை வாங்கி கொண்டு பருக ஆரம்பித்தான்.

  

************

  

போனில் பேசியப் படி காரை விட்டு இறங்கினாள் இந்து...

  

இந்துவை பேரழகி என்று சொல்ல முடியாது! ஆனால் பார்த்ததும் மனதில் பதியும் விதத்தில் இருந்தாள். அவள் அணிந்திருந்த லைட் கிரீன் சுரிதாரும், டார்க் கிரீன் ஷாலும் அவளுக்கு வெகு அம்சமாக பொறுந்தி இருந்தது!

  

பார்க்க பக்கத்து வீட்டுப் பெண் போல மேக்கப் எதுவும் இல்லாமல் சிம்பிளாக இருந்தவள், இந்த பெரிய நிறுவனத்தை நிர்வாகம் செய்பவள் என்று நம்புவதே கடினம் தான்!

  

"ரிசெப்ஷனில யெல்லோ கலர் டி ஷர்ட்... ஓகே, நான் பார்த்துப் பேசுறேன்..." என்று சொல்லி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.