(Reading time: 40 - 80 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

பிடிக்கும் அவள் படிப்பு முடிஞ்சதும் அவளை கல்யாணம் பண்ணிக்க கேட்கனும்னு இருந்தேனே இப்ப என்ன செய்றது இல்லை இல்லை அவளை விடக்கூடாது“ ன நினைத்தவன் உடனே கீர்த்தனாவிடம்

   

”கீர்த்தி இப்ப என்ன உனக்கு பணம்தானே கொடு, நான் வாங்கிக்கிறேன் பவி உள்ள போயிட்டா, நீ மட்டும் இப்ப பவி கூட இல்லைன்னா என்னை திட்டுவா, நீ அவளோடதானே வந்த அவள் கூடவே தங்கிக்க கொடு பணத்தை இந்த சின்ன விசயத்துக்கு போய் அண்ணாவை ஏன் தொந்தரவு செய்யனும்” என சொல்ல கீர்த்தனாவும் விக்ரமிடம் பணம் தந்த பின்பே அந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்தவள் திரும்பி தேவநாதனை ஒரு மின்னல் பார்வை பார்த்து ஒரு சின்ன புன்சிரிப்பை சிரித்து வைக்க அந்த சிரிப்பில் அந்த பார்வையில் தன்னை முற்றிலுமாக இழந்தான் தேவநாதன். 

   

கீர்த்தனா வந்தது மட்டும் போதும் என நினைத்த விக்ரம், தேவனும் அவளை ஆசையாக அதை விட காதலாக பார்ப்பதை அறியாமல் அவளை பார்த்துச் சிரித்தான். என்னவோ அவள் தனக்காகவே சிரித்தாள் என நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டான். அவளோ சிரித்துவிட்டு திரும்பி வீட்டுக்குள் நுழைந்து நடக்க விக்ரம் தேவன் இருவரது கண்களும் அவளை பின்தொடர்ந்தன. 

   

இருவரது போக்கினைக் கண்ட தாஸ்க்கு மட்டும் ஏதோ ஆபத்து வரப் போகிறது என அலாரம் அவன் மூளையில் பலமாக அடித்தது. இரு நண்பர்களுக்கு நடுவில் ஒரு பெண் வந்துவிட்டாள் என்றே அவன் நினைத்து கீர்த்தனாவை வெறுக்கலானான். அதை அறியாத விக்ரமும் தேவனும் கீர்த்தனாவை மனதார விரும்பலானார்கள்.

   

கீர்த்தனாவின் சிரிப்புக்கும் பார்வைக்கும் என்ன அர்த்தம்? இவளால் இரு நண்பர்கள் பிரிந்து விடுவார்களா?? உண்மை நிலைமைய அறிந்த தாஸ் அடுத்து என்ன செய்யப் போகிறான்???

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.