ரிசப்ஷனிஸ்ட் அழைக்கவும் தாஸ் தேவாவை உலுக்கினான். அவனும் எழுந்தான் ரிசப்ஷனிஸ்ட்
”உங்களை கூப்பிட்டாங்க நீங்க போகலாம்” என சொல்ல தேவனும் தாஸுடன்
”சரி வா போவோம்” என இருவருமாக சரண் இருந்த அறைக்குச் சென்றார்கள்.
அதற்குள் சரண் இருந்த அறைக்கு வெளியே 2 பாடிகார்டுகளும் நிற்பதைக் கண்டுச் சிரித்தான்.
”ரொம்ப ஓவரா பண்றாங்கப்பா தாங்க முடியலை” என சொல்லிக்கொண்டே அங்கு சென்றான்
”என்ன வேணும்” என ஒருவன் கேட்க
”சரண் வர சொன்னானே அதான் வந்தேன். அப்புறம் மீட்டிங் எப்ப வைச்சிக்கலாம்னு கேட்க சொன்னாங்க, டைம் சொல்லிட்டா ஏற்பாடு செய்ய வசதியா இருக்குமாம் சொல்லச் சொன்னாங்க” என சொல்ல ஒருவன் இன்னொருவனை பார்த்துவிட்டு கதவை டொக் டொக் என தட்டினான். சில நொடிகளில் கதவு லாக் திறக்கப்பட்டது. ஆனாலும் கதவு திறக்கவில்லை
”கமின்” என்ற குரல் ஒன்று வர ஒரு பாடிகார்டு மட்டும் கதவை திறக்க தேவா உள்ளே நுழைந்தான் பின்னாடி வந்த தாஸை அவர்கள் நிப்பாட்ட தாஸோ தேவாவை பார்க்க
”இருடா இங்கயே இரு வரேன்” என சொல்ல அவனும் அமைதியாக கதவுக்கு நேராக நின்றுக்கொண்டு கதவையே முறைத்துக் கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்ததும் சரணை பார்த்தான் வேறு ஒரு உடையில் மெத்தையில் அமர்ந்திருந்தான். லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே வந்த தேவாவோ அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டு