(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”எப்ப மீட்டிங் வைச்சிக்கலாம்னு டைம் சொன்னா நான் ஆபிஸ்ல சொல்லிடுவேன்” என அவன் கேட்க அவனது கம்பீரமான குரல் கேட்டு சரண் ஒரு முறை தலைதூக்கி பார்த்துவிட்டு திரும்பவும் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்ய தேவா அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். 2 நிமிடம் கழித்து சரணே பேசினான்

   

”நாதன் குரூப்ஸ் அனுப்பின தகவல்கள் கிடைச்சது, அதை உறுதிப்படுத்திக்கத்தான் இங்க வந்தேன். 2 நாள் இங்க தங்கிட்டு உங்க பிசினஸ் பத்தி விசாரிச்சி தெரிஞ்ச பின்னாடிதான் மீட்டிங் வைக்க முடியும்” என சொல்ல தேவா சிரித்தான்

   

”தாராளமா விசாரிங்க யார் வேணாம்னு சொன்னது அப்ப சரி உங்க கிட்ட விசிட்டிங் கார்டு இருக்குல்ல, நீங்களே மீட்டிங் எப்ப வச்சிக்கலாம்னு போன்ல சொல்லிடுங்க நான் கிளம்பறேன்” என சொல்லி எழுந்தவனைத் தடுத்தான் சரண்

   

”உட்காருங்க” என சொல்ல

   

”எதுக்கு”

   

“ப்ளீஸ் சிட் டவுன் மிஸ்டர் தேவ்” என அதிகாரமாக சொல்ல

   

”என்னடா தம்பி ஓவரா மிரட்டற நீயிருக்கறது என் ஊர்ல” என சொல்ல அவனோ ஒரு ஃபைலைக் காட்டி

   

”இது உங்க ஃபைல் இதை நான் சரி செய்யலைன்னா உங்களுக்கும் எங்க கம்பெனிக்கும் உண்டான டீலிங் கேன்சல் ஆயிடும், அந்த ஹாஸ்டல் ப்ராஜக்ட் மொத்தம் எங்க கைக்கு வந்துடும் சோ ப்ளீஸ் சிட் டவுன்” என அழுத்தமாக இன்னும் கோபத்துடன் சொல்ல

   

”சரிதான் போடா எனக்கு வேலை இருக்கு நீயாச்சி உன் டீலிங்காச்சி” என சொல்ல 

   

சரணோ உடனே

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.