(Reading time: 42 - 83 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

வெளியே தாஸ் யாரையோ அடிக்க அவர்களும் அடிக்க என பெரிய சண்டையானது. செக்யூரிட்டிகளோ அதைப் பார்த்தும் அமைதியாக காவல் காப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு நேராக தாஸிடம் சென்றான்

   

”டேய் எதுக்குடா இவனை அடிக்கற” என கேட்க அவனோ ஏதோ சைகை செய்து ஒரு அறையை காட்ட அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான் தேவா

   

”ஏய் நீ இங்க என்ன பண்ற வா வெளிய” என அழைக்க உள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். தாஸ் ஒருவனை பிடித்து வைத்திருந்தான். அதற்குள் சரண் வந்து நின்றான்

   

தேவா அந்த பெண்ணிடம்

   

”காலேஜ்க்கு போகாம இங்க இவன்கூட ஓட்டல் ரூம்ல என்ன செய்ற நீ” என கேட்க அவளோ பயத்தில் அழ ஆரம்பித்தாள். அதற்குள் அந்த பெண்ணுடன் வந்தவனோ

   

“நானும் அவளும் லவ் பண்றோம், குரூப் ஸ்டெடிக்காக வந்தோம்”

   

“குரூப் ஸ்டெடியா ஏண்டா டேய், ஓட்டல் ரூம்ல என்னடா குரூப் ஸ்டெடி உன்னை” என தேவா அவனது 2 கன்னத்தில் பலமாக அடிக்கவே அவன் பயந்து

   

”அண்ணா வலிக்குதுண்ணா விடுண்ணா அந்த பொண்ணுதான் கூப்பிட்டா” என சொல்ல அதற்கு தேவா அவளைப் பார்த்தான்

   

”எதுக்கு அவனை கூப்பிட்ட உண்மையை சொல்லு இல்லை உன் அப்பாவுக்குப் போன் பண்ணி சொல்லிடுவேன்” என சொல்ல அவள் உடனே அழுதுக்கொண்டே

   

“அண்ணா அப்பா எனக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்க்கறாரு அதான் ஓடிவந்துட்டேன், நாங்க இரண்டு பேரும் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்” என சொல்ல தேவா உடனே அந்த பையனைப் பார்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.