“சரண்யா”
“உன் பேரு சரண் அவள் பேரு சரண்யாவா பேர் வைக்க கூட உன் அப்பா அம்மாவுக்கு பஞ்சம் வந்துடுச்சா”
“எனக்கு அம்மா இல்லை இறந்துட்டாங்க தாத்தா அப்பா மட்டும்தான்” என சொல்ல தேவா உடனே
”எத்தனை மணிக்கு ப்ளைட்”
“ஈவ்னிங் 4 மணிக்கு” என சொல்ல அவன் மணியை பார்க்க அப்போதே மணி மதியம் ரெண்டு என காட்டவே
”உன் தங்கச்சி எப்படியிருப்பா”
“ஏன் கேட்கற” என சந்தேகமாக கேட்க
”உன்னை தேடறதுக்கே நான் அரை மணி நேரம் வேஸ்ட் பண்ணேன் அதான் கேட்டேன்”
“நானும் அவளும் ட்வின்ஸ், நான் பையன் அவள் பொண்ணு போதுமா என்னை பார்த்தல்ல என்னை போலதான் என் ஜாடையில அவள் இருப்பா” என சொல்ல
அவனும் சரியென தலையாட்டியபடியே அங்கிருந்து வெளியேறி சென்றான் தேவன். தாஸ்க்கு போன் செய்து வண்டியை வரவழைத்து அவனுடன் நேராக விமான நிலையத்திற்குச் சென்றவன்
அவனிடம் பேசினான்
”இந்த சரணே இப்படி இம்சையாயிருக்கானே அவன் தங்கச்சி எந்த லட்சணமோ”