என சொல்ல சரணோ
”கம் வித் மீ” என சொல்லியபடியே முன்னாடி நடக்க பின்னாடியே தலையில் அடித்துக் கொண்டு நடந்தான் தேவா
அறைக்குள் சென்றதும் கதவை சாத்திய சரணோ தேவாவிடம்
”என் தங்கச்சி ப்ளைட்ல வர்றா அவளை பிக்கப் பண்ணிடு” என சொல்ல
”தங்கச்சியா இதை சொல்லவா இவ்ளோ நேரம் எடுத்த, உன் கூடவே அவளையும் கூட்டிட்டு வரவேண்டியதுதானே”
”டிக்கெட் கிடைக்கலை அதான் அவளை கூட்டிட்டு இங்க வந்துடு.”
”அவளுக்கு தனியா ரூம் எடுக்கனுமா”
“இல்லை அவளை உன் வீட்ல கொண்டு போய் வைச்சிக்க, இந்த ஓட்டல்ல அவளை எப்படி தங்க வைக்கறது, இப்ப கூட வெளிய நடந்ததைப் பார்த்தா பயமா இருக்கு, அவளுக்கு ஏதாவது ஆச்சின்னா ரொம்ப கஷ்டம் இங்க யாரையும் நம்ப முடியலை. உன் அப்பாவுக்கு அவளைத் தெரியும் இன்னும் சொல்லனும்னா அவளை வீட்டுக்கு கூப்பிட்டதே அவர்தான். சோ அவளை கூட்டிட்டு நீ வீட்டுக்கு போயிடு” என சொல்ல தேவனோ
“என் மேல சந்தேகம் வரலையா தனியா உன் தங்கச்சியை என்கிட்ட விடற”
“நான் உன்னை நம்பறேன், அதனாலதான் அவளை பார்த்துக்கற பொறுப்பை உன்கிட்ட விடறேன்” என சொல்ல அவனோ யோசித்தான்
”சரி அவள் பேர் என்ன?”