”நீ என்னடா வேலை பண்ற”
“படிக்கறேன்”
“படிக்கற வயசுல இவளை கல்யாணம் பண்ணி என்ன செய்யப்போற உன் வீட்ல ஏத்துக்குவாங்களா”
“நான் மூட்டை தூக்கி சம்பாதிச்சி அவளை காப்பாத்துவேன்”
“கிழிச்ச வேலை செய்ற முகத்தை பாரு, எனக்குத் தெரியாது எவன் எப்படிப்பட்டவன்னு போ ஒழுங்கா வீடு போய் சேரு போ” என விரட்ட அதோடு அவன் ஓடிவிட அந்த பெண்ணைப் பார்த்தான்
”ஒழுங்கா அப்பா பார்க்கற பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்க அப்பதான் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்”
“ஆனா அண்ணா நான் அவனை உயிருக்குயிராய் லவ் பண்றேன்”
என சொல்ல
”சரி அப்ப ஒண்ணு பண்ணு, நீ வீட்டுக்கு போ நான் உன் அப்பாட்ட பேசறேன். கல்யாணத்தை 2 வருஷம் தள்ளிவைக்கச் சொல்றேன். அவன் படிச்சி உருப்படியா வேலைக்கு போய் அவன் வீட்லயும் உன்னை ஏத்துக்க சம்மதிச்சா நானே கல்யாண செலவு மொத்தம் செஞ்சி உன்னை அவன் கூட சேர்த்து வைக்கறேன்.
அதை விட்டுட்டு அவனை நம்பி இப்படி ரூமுக்கு வந்த கொன்னுடுவேன். நீ வந்த விசயத்தை நான் சொல்லலை எதுவும் நடக்காத மாதிரி வீடு போய் சேரு, அப்புறம் அவன் நல்லவனா கெட்டவனான்னு கூட தெரியலை, கொஞ்சம் பார்த்து பழகு படிப்புதான் உனக்கு முக்கியம் புரியுதா பிரச்சனைகளை அப்புறமா பார்த்துக்கலாம்