”அறிவிருக்கா என்னை விட்டு எங்கய்யா போன” என கேட்க அவனோ
”கூட இருன்னுதானே சொன்னேன் நீயா ஏன் போன” என கேட்க
”நான் வந்தேன் அதுக்குள்ள நடுவுல ஆளுங்க போனாங்களா அதுல நீ என்னை விட்டுட்டுப் போயிட்ட”
“யாரு நானா அதுக்குதான் நான் உன் கையை பிடிச்சேன்”
“அது தப்பு”
“சரியான இம்சை வா வா போலாம்” என சொல்ல அவளும் உடனே அவனது கையை பிடித்தாள்
”ஓய் நீ மட்டும் இப்ப என்ன பண்ற”
“நான் பிடிக்கலாம் நீ பிடிக்க கூடாது” என சொல்ல சிரித்தான் தேவா
”சரி வா சாப்பிட்டியா”
“இல்லை”
“சரி வா வீட்டுக்கு போய் சாப்பிடுவ” என சொல்லிக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏற தாஸ் அவளது 3 பெட்களையும் டிக்கியில் வைத்து விட்டு காரில் ஏறிக்கொள்ள கார் நேராக தேவாவின் வீடு நோக்கிச் சென்றது.
முன்சீட்டில் தேவா கார் ஓட்ட பக்கத்தில் தாஸ் இருந்தான். பின்சீட்டில் சரண்யா அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதது போல அவன் வண்டியை ஓட்டினான். தனது ஏரியா வரவும் சற்று வேகம் குறைத்தான் அதிலும் தனது வீடு இருக்கும்