கீர்த்தனாவின் முகம் பிரகாசமானது ஆனாலும் பவி வேண்டுமென்றே சிரித்தபடியே
”ஐ நான்தான் ஜெயிச்சேன். நான்தான் இதை செஞ்சேன்” என சொல்ல தேவா அதிர்ந்தான். உடனே கீர்த்தனாவை பார்க்க அவள் அதிர்ச்சியுடன் இருப்பதைக் கண்டு பவியிடம்
”உண்மையை சொல்லு இதை நீயா செஞ்ச”
“ஆமாம்”
“ம்ஹூம் எனக்கு நல்லா தெரியும் இதை நீ செய்யலை கீர்த்தனாதான் செஞ்சா”
“எப்படி சொல்றீங்க”
“ஒரு முறை நான் கேரளால இதை சாப்பிட்டிருக்கேன். அந்த ருசி இதுல இருக்கு, நீ செஞ்சது இந்த ஊர்ல செய்ற மாதிரியான பொங்கல் போதுமா” என கோபமாகச் சொல்ல
”அப்ப என்னோடது நல்லாயில்லையா”
“உன்னோடது நல்லாதான் இருக்கு, இருந்தாலும் இது சூப்பரா இருக்கு” என சொல்ல பவியின் கண்கள் கலங்கி அவள் உடனே அறைக்குள் ஓட விக்ரமோ
”என்ன அண்ணா” என கேட்க
”நான் உண்மைய சொன்னேன், உன் தங்கச்சிதான் சின்ன விசயத்துக்கு பொய் சொல்றா, அவள்ட்ட சொல்லு இந்த தேவாக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு, இன்னொரு முறை அவள் பொய் சொன்னா நல்லா என்கிட்ட திட்டுவாங்குவான்னு சொல்லு புரியுதா விக்ரம்”
“சரிண்ணா சரிண்ணா நீ சாப்பிடு, கீர்த்தி அண்ணாக்கு பரிமாறு நான் போய் பவியை சமாதானம் செய்றேன்“