“நீ என்ன செய்றேன்னு பார்க்கறேன்“
“நீங்க இருந்தா எனக்கு கூச்சமா இருக்கும்”
“நான் உன் முதலாளி, இப்படியா பேசுவ சொல்லு இப்படியே நீ வெளிய இருக்கற ஆபிஸ்லயும் பேசினா, அவனவன் உன்னை தப்பா பயன்படுத்திக்க முயற்சி செய்வான், யார் இருந்தா உனக்கென்ன? உன் லட்சியத்து மேல கவனம் செலுத்து, நான் உன்னை தப்பா பார்க்க மாட்டேன், நீ வரையற ப்ளான்தான் பார்ப்பேன் என்னை நம்பு” என சொல்ல அவளும் சரியென்று வேலையை ஆரம்பிக்கலானாள்.
அதற்காகவே அவன் ஏற்கனவே வரைந்த வீட்டுப் ப்ளானை மாடலாக வைத்துக் கொண்டு இன்னொரு போர்டில் சாட் பேப்பரை பொறுத்தி ஸ்கேல் மற்றும் பென்சில் எடுத்துக் கொண்டு வரைய ஆரம்பித்தாள்.
தேவா தான் சொன்னதை மறந்து அவளையே தின்று விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு முறை கூட அவள் வரையும் ப்ளானை அவன் கவனிக்கவில்லை. நேரம் போனது கூட தெரியவில்லை. கண்ணெதிரில் அழகான ஓவியப் பெண் ஓவியம் வரைவதைக் கண்டு ரசித்தவன் அவளுடன் கற்பனையில் ஒரு டூயட்டே பாடலானான்.
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னன னா னன னன னன னன னா