பூவை எந்தன் தேவை உந்தன் தேவை அல்லவோ
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னன னா னன னன னன னன னா
இந்த பாட்டை நினைத்துக் கொண்டு ஆரம்பித்தவன் நடுவில் தன்னையும் மறந்து வாய்விட்டு பாட அதைக்கேட்ட கீர்த்தனாவோ அவனை ஆசையாக பார்க்கவே அவளைப் பார்த்தே பாடி முடித்தவன் அவளை கைநீட்டி வா என அழைக்க அவள் மெதுவாக அவனிடம் வந்தாள். அவளை தன் மடியில் அமர வைத்தவன் அவளிடம்
”ஒரு முத்தம் கொடு”
“எனக்கு கூச்சமா இருக்கு”
“நானா கொடுத்தா வில்லங்கமான இடத்தில தருவேன், நீயா கன்னத்துல கொடுத்துடு, நான் உன்னை விட்டுடறேன்”
“என்ன இது வேலை நேரத்தில முதலாளி இப்படி செய்யலாமா”
“மதியம் ஆயிடுச்சி” என்றான் தேவா அவள் சந்தேகத்துடன்
”மதியமா எப்படி நான் வந்தே அரை மணி நேரம்தானே ஆச்சி”
“உனக்கு டைம் போனதே தெரியலை இதப்பாரு வாட்ச் பாரு” என அவளுக்கு காட்ட அவளும் பார்த்தாள். பிற்பகல் 12.03 என காட்டவே சிரித்தவள்
”இதான் மதியமா”
”எனக்கு இதுதான் மதியம்”