”தேவா” என அழைக்க அவன் திரும்பினான்
”வந்துட்டு திரும்பி எங்க போற எதுக்கு வந்த நீ”
“தாமரையை பார்க்க வந்தேன், தாமரை இல்ல”
“பேரை வைச்சி பேசாதன்னு எத்தனை முறை சொல்றது, நான் கூட இந்தளவுக்கு உரிமையா அவள்ட்ட பேசலை தெரியுமா”
“சாரி தாத்தா” என்றான்
”ஆமா யார் இந்த பொண்ணு?”
“என் காதலி”
“கையில பையோட நிக்கறா, என்ன ஓடிவந்துட்டாளா”
“ஆமாம்”
“உன் வீட்ல சேர்த்துக்கலை போல அதான் இங்க வந்திருக்கியா”
“நான் தாமரைகிட்ட இவளை விட்டுப் போக வந்தேன்” என அவன் சொல்ல அவரோ வேறு ஏதோ நினைத்துக் கொண்டு
“ஓ நீ அப்படிவர்ற சரி சரி உள்ள வா”
என சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்ல பின்னாடியே தேவாவும் கீர்த்தனாவும் உள்ளே வந்தார்கள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அவளது லக்கேஜ்கள் வாங்கப்பட்டு ஒரு அறைக்குள் அழைத்துச்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 22 of 36