“முடியும் தாத்தா என்ன கன்டிஷன்”
“வெளிய எங்கயும் போக கூடாது, தாமரை கூடதான் எப்பவம் இருக்கனும், உனக்கு தேவையான அனைத்துமே இங்க கிடைக்கும் தேவைன்னா கேட்டா செய்யவும் இங்க ஆள் இருக்காங்க, எதுக்காகவும் நீ பயப்பட வேணாம், வெளிய போக வேண்டிய அவசியமும் உனக்கு இல்லை புரியுதா”
“புரியுது தாத்தா”
”இங்க நீ எத்தனை நாள் இருக்கியோ அத்தனை நாளும் உனக்கு இங்க சுதந்திரம் இருக்கும் ஆனா இந்த வீட்டுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு அதை நீ மீறக் கூடாது”
“சரிங்க தாத்தா”
“ஒழுக்கத்தோட இருக்கனும், எந்த வம்பு தும்புக்கும் போக கூடாது, முக்கியமா இவன் கூட நீ சுத்தக்கூடாது” என தேவாவைப் பார்த்து கைகாட்ட அதற்கு
”ஏன்” என தேவா கத்த
”கல்யாணம் ஆகட்டும் அதுவரைக்கும் இவள் நிழலை கூட நீ தொடக்கூடாது” என சொல்ல அவனோ
”இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் அவள் என் காதலி” என சொல்ல சுந்தரமோ
”அப்படியே உன் தாத்தாவை போலவே பேசி வைக்காத காதலிக்கறவங்க எல்லாருமே கல்யாணம் பண்ணிக்கறதில்லை புரியுதா” என சொல்ல அவனோ முறைத்தான்.
“என்னடா முறைப்பு, இந்த வீட்ல இவள் தங்கனும்னா நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கனும் புரியுதா” என அவர் மிரட்டலாக பேச அவனோ
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 24 of 36