(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 07 - சசிரேகா

  

தாமரை பாட்டியோ கீர்த்தனாவிற்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவள் பயத்துடன் இருக்கவே அவளது அறையில் 

   

”பயப்படாத நான் இருக்கேன்ல என்னை நீ நம்பலையா” என கேட்க அவளோ

   

”அப்படியில்லை நீங்க சொன்ன உங்க வாழ்க்கையை போல இப்ப என் வாழ்க்கையும் வந்திருக்கு. 2 நண்பர்கள் சேர்ந்து உங்களை காதலிச்சாங்க, இப்ப என்னையும் 2 நண்பர்கள் காதலிக்கறாங்க, அவங்களும் பிரிஞ்சிடுவாங்களா இல்லை அந்த விக்ரம் உங்க புருஷனை போல என்னை தூக்கிட்டு போயிடுவாரா. அப்படி ஒரு விசயம் நடந்தா உங்களை போல நான் கண்ணை மூடிக்கிட்டு பிடிக்காத ஒருத்தனோட வாழ்வேன்னு நினைக்காதீங்க, மனசுல ஒருத்தனை நினைச்சிக்கிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தற கேவலத்தை விட நான் தற்கொலை செஞ்சிக்குவேன்” என அவள் சொல்லி அழவும் அவளை தன்னுடன் அரவணைத்து ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தார் தாமரை பாட்டி. அறைக்கு வெளியே நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்திற்கு கஷ்டமாகிப் போனது. அவர் ஏதோ சிந்தனையில் தான் செய்தது தவறோ என்று யோசிக்கலானார்.

   

வீட்டிற்கு வந்த தேவாவோ தாத்தாவிடம் செல்ல அவரோ தேவாவிடம் விக்ரம் தாமரை வீட்டுக்கு வந்தது அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி 

   

”சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கற வழியை பாரு சரியா”

   

“சீக்கிரமா செய்றேன் தாத்தா” என சொல்லிக் கொண்டே  அவர் அறையை விட்டு வெளியே வர அங்கு சரண் அமர்ந்திருக்கவே அதிர்ந்தான்

   

”இவன் இங்க என்ன செய்றான்” என யோசித்துக் கொண்டு அவனிடம் சென்றான், அவனோ கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

   

”நீ இங்க என்ன செய்ற?”

   

“என் தங்கச்சி பாவம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.