ஓனரை போய் பார்க்கலாம் சரியா”
என சொல்ல தாஸ் குதூகலாமாகச் சரியென தலையாட்டினான்.
”என் தங்கச்சியை பார்த்துக்க நான் இருக்கேன்” என தாஸ் சைகையில் சொல்ல
”எனக்கு தெரியும் இப்பவே நான் கீர்த்தனாகிட்ட போறேன், நானும் அவளுமா சேர்ந்து ப்ளான் வரையறோம்” என சொல்ல அவன் அதிர்ந்தான்
”வேணாம்” என பலமாக தலையாட்ட
”நான் உன் தங்கச்சியை எதுவும் செய்யமாட்டேன். எனக்கு இருக்கற கஷ்டத்துக்கு தப்பு செய்ற எண்ணம் கூட வரலைடா” என சொல்ல தாஸ் திருப்தியுடன்
”கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிஸ் என்ன செய்றது என ஆபிசை நோக்கி கைகாட்டி கேட்க
”அது இருக்கட்டும் நானும் அவளும் சேர்ந்து நாளைக்கு அங்கதான் ப்ளான் வரையனும், அதை மூடிடாத நான் பார்த்துக்கறேன்.” என சொல்லிவிட்டு இருவருமாக ஒரு ஓட்டலுக்குச் சென்று திருப்தியாக சாப்பிட்டு இன்னும் வேறு என்னென்ன செய்யலாம், எப்படி கீர்த்தனாவை காப்பாற்றலாம்? சரண்யாவை எப்படி விரட்டலாம் என கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிசில் இருவருமாக விடிய விடிய பேசிவிட்டு ஒருவழியாக தாஸ் தேவாவை பத்திரமாக அனுப்பிவைக்க தேவாவும் தாமரை வீட்டின் முன் நின்றான் கையில் பையுடன். அந்நேரம் பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. நேரம் 5 என காட்டவே சுந்தரத்தை நினைத்து கலங்கியபடியே உள்ளே நுழைந்தவன் அங்கு போர்டிகோ தாண்டி வாசல் இருக்கும் இடத்தில் யாரோ கோலம் போடுவதைக் கண்டு மெய்மறந்து நின்று வேடிக்கை பார்க்கலானான்.
தாமரை பாட்டியும் கீர்த்தனாவும் பேசிக்கொண்டே கோலம் போடலானார்கள்.
பாட்டி சாதாரண கிராமியத்தனமாக இருந்தார். அவர் முகத்தில் இருந்த வெகுளித்தனம், பேச்சு அனைத்தும் பிடித்துவிட்டது, கீர்த்தனாவோ கேரளா பாணியில் சந்தன நிற பாவாடை