”உன்னை நான் எதிர்பார்க்கலை”
“நானும்தான் இவ்ளோ காலையில இப்படி நீங்க வேலையா இருப்பீங்கன்னு நானும் எதிர்பார்க்கலை”
“சரி சரி உட்காரு” என சொல்ல அவனும் அமர்ந்தான்
”என்னப்பா வேகமா போனியே, போன வேகத்தில வந்து நிக்கற”
“என்ன செய்றது, வரவேண்டியதா போச்சி இந்த முறை யாரோட கட்டாயத்திலயும் வரலை, எனக்காக மட்டும்தான் வந்தேன் அப்புறம் கீர்த்தனாவை பார்த்துக்கவும் வந்தேன்”
“அவளை நான் பார்த்துக்கறேன் பிடிக்காத இடத்தில நீ தங்க வேணாம்”
“பரவாயில்லை தாத்தா நான் இருக்கேன், 2 வாரம்தானே அப்புறமா பிரச்சனை ஓஞ்சதும், அவளை கூட்டிட்டு நான் என் வீட்டுக்கு போயிடுவேன். இப்ப என் வீட்ல நிலைமை சரியில்லை”
“சரி அப்ப இங்க தங்கறதா நீ முடிவு பண்ணிட்ட”
“ஆமாம்”
”உன் பேர் என்ன?”
”ஏன் உங்களுக்குத் தெரியாதா?”
“என் வீட்ல நீ தங்கனும்னா நான் கேட்கற கேள்விக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகனும், அப்பதான் தங்க வைப்பேன் இல்லைன்னா போயிடு” என சொல்ல அவனோ