வெளியேறினான். அங்கு மற்றவர்கள் சென்றாலும் தாத்தா மட்டும் இருப்பதைக் கண்டு
”என்ன தாத்தா ஆஸ்பிட்டல் போகலையா”
“நீ போற வரைக்கும் நான் எங்கயும் போகமாட்டேன், உன் வீட்ல ஏதோ விசேஷம் போல ஊர்க்காரங்க எல்லாரும் வந்திருக்காங்க பார்க்கலையா நீ”
“எனக்கு தெரியலையே சரி நான் போய் பார்க்கறேன்” என சொல்லிவிட்டு அவசரமாக வெளியே சென்று தன் வீட்டுக்குள் நுழைய அங்கு சரணை மாப்பிள்ளை போல அமர வைத்து அவன் முன்பு தாரா மற்றும் மந்த்ராவை அலங்காரப்படுத்தி நிற்க வைத்திருந்தார் சேதுப்பிள்ளை. அங்கு சுற்றிலும் சொந்தங்கள் பந்தங்கள் இருக்கவே அதிர்ந்தான் தேவா. சரணும் கவலையில் உறைந்திருந்தான்.
சேதுப்பிள்ளையோ
”சரண் தம்பி எந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க இன்னிக்கு நல்ல நாள்தான் ஒப்புத்தாம்பூலம் மாத்திக்கலாம்” என சொல்ல சரணுக்கு பயமே வந்தது. அதைக்கேட்ட தேவாவுக்கு பக்கென்றது.
சரணின் உண்மை சொரூபம் தெரிந்துவிடுமா? உண்மை தெரிந்தால் சரண் மற்றும் சரண்யாவின் நிலைமை என்ன?? தேவா செய்த தவறால் சரண்யாவின் குடும்பத்தில் நடக்கப் போகும் விபரீதங்கள் என்ன???
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...