“அவளாதான் என்னை விரும்பினா நான் விரும்பலையே”
”ஏன் விரும்பினா என்னவாம் அவளுக்கென்ன குறை” என அவன் கத்த அவனையே ஏற இறங்கப் பார்த்தான். அந்நேரம் அவனது தந்தை கைலாசநாதன் வரவே அவரிடம்
”அப்பா உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்னு இருக்கேன்”
“என்ன விசயம் இப்பதான் நான் சரண்கிட்ட பேசி சமாதானம் ஆக்கி வைச்சேன், நீ திரும்பவும் சரண்யாவை பத்தி பேச்சு எடுக்காத”
“இல்லைப்பா அதுக்கில்லை இந்த சரணை பாருங்களேன் அழகா இருக்கான், திறமையானவன் வேற, ஏன் நம்ம மாமா பொண்ல ஒருத்தியை இவனுக்கு கட்டி வைக்க கூடாது. என்னால உருவான பிரச்சனைக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்குமே, டீலிங்கோட நீங்களும் இவனோட அப்பாவும் சொந்தங்கள் ஆகலாமே” என கேட்க அதிர்ந்தான் சரண்.
”ஆமாம்டா இதை நான் யோசிக்கலை பாரேன், எனக்கும் இது சம்மதம்தான்” என சொல்ல சரண் கத்தினான்.
”இல்லை இல்லை முடியாது”
”நான் உன் அப்பாட்ட பேசறேன்“
“வேணாம்” என கத்த தேவாவோ
”அப்பா அவன் சரண்யாவை நினைச்சி முடியாதுங்கறான் நாம பேசலாம் அவங்க வீட்ல” என சொல்ல அவரும் சம்மதம் சொல்ல உடனே மாமா சேதுப்பிள்ளையும் சந்தோஷமாக களத்தில் இறங்கினார்