”கீர்த்தனாவை விரட்டவாம்”
“கீர்த்தனாவை விரட்டிட்டா ஆச்சா அப்படியே நான் சரண்யாவை ஏத்துக்குவேன்னு எப்படி அவள் நம்பறா ஆனா? இந்த கீர்த்தனா எப்படி அவங்க பேச்சை கேட்டு போனா என்கிட்ட எதுவும் சொல்லவேயில்லையே” என கேட்க
”தெரியலை என்னவோ நடந்திருக்கு போ கீர்த்தனாவை தேடிப்பிடி”
“சரி அவள் எப்ப போனா”
“காலையிலதான்”
“அப்படியா சரி நான் பார்த்துக்கறேன்” என சொல்லிய தேவா தாஸ்க்கு நடந்ததைச் கூற அவன் அதிர்ந்தான். தேவா அவசரமாக விக்ரமை தேடி அலைந்து ஓரிடத்தில் அவனை பிடித்து அவனை அடிக்கவே ஆரம்பித்தான்
”டேய் எங்கடா கீர்த்தனா”
“எனக்கு தெரியாது அந்த சரண்யாதான் என்னவோ பேசி விரட்டிட்டா, பவிக்கும் கீர்த்தனாவை பிடிக்கலையாம், அதனால அவளை அண்ணியாகூட நான் ஏத்துக்க மாட்டேன்னு விரட்டிட்டா, நானே அவளை தேடி ஓஞ்சி போயிட்டேன், என்னை மன்னிச்சிடு தேவா, கேட்பார் பேச்சைக் கேட்டு இப்படி நடந்துக்கிட்டேன். இப்ப கீர்த்தனாவும் இல்லை. அவளுக்காக உன்னை பகைச்சி வேலையும் விட்டேன் உன்னோட தொழிலும் போச்சி. எல்லாம் போச்சி”
“யார் பேச்சை கேட்டு இப்படி ஆடின”
“அந்த டாக்டர் சுந்தரத்தோட பேச்சுதான் அவர் அன்னிக்கு என்னைக் கூப்பிட்டு” என ஆரம்பித்தவன் சுந்தரம் அன்று விக்ரமுடன் பேசியது எல்லாம் சொல்ல உடனே கோபமாக
Next episode pls