“அதுசரி ஆமா இப்ப என்ன உன்னை உன் வீட்ல விடட்டுமா”
“வேணாம்”
“வேணாம்னா என்ன அர்த்தம் சரி என் வீட்ல விடட்டும்மா”
“அங்கயும் வேணாம் எதுக்குடா இப்படி யோசிக்கற”
“பின்ன என்னதான் செய்றது” என கேட்க கீர்த்தனாவோ
”நானும் உங்க வீட்டுக்கு வரமாட்டேன்” என சொல்ல
”சந்தோஷம் யாரும் எந்த வீட்டுக்கும் போக வேணாம் போதுமா”
என கத்த தாஸ் உடனே
”வேற எங்க போற” என கேட்க அவன் யோசித்தான். என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது
”தாமரை நான் ஒண்ணு சொன்னா நீ கோச்சிக்க மாட்டியே”
“இல்லை என்ன விசயம் சொல்லு”
“நீ, நான், கீர்த்தனா, தாஸ் 4 பேரும் ஒண்ணா ஒரு வீட்ல தங்கிடலாம் என்ன சொல்ற” என கேட்க அதற்கு கீர்த்தனாவோ
”நான் வரமாட்டேன்”
“ஏய் லூசு எங்கயும் வரலைன்னா நீ வேற எங்க தங்குவ”