”பரவாயில்லைடா எத்தனை நாளைக்கு நீ சீக்கிரமா வீடு கட்டிடு, அப்புறம் புது வீட்டுக்கு நாம வந்துடலாம்”
”சரி இறங்கு வா வந்து வீட்டைப்பாரு வா” என அழைக்க அவர் இறங்க கீர்த்தனா மட்டும் அங்கேயே இருக்கவே
”தாமரை நீ போய் வீடு பாரு, நான் இவளை சமாதானம் செய்றேன்” என சொல்லி தாஸையும் தாமரையையும் அனுப்பிவிட்டு காரின் பின்சீட்டில் ஏறி கீர்த்தனாவின் பக்கத்தில் அமர்ந்தான்
”நீங்க என்ன சொன்னாலும் சரி, நான் வரமாட்டேன் நான் போறேன் ஆசிரமத்துக்கு” என அவள் சொல்ல சிரித்தான்.
அவளது தோளை பிடித்து தன்னிடம் இழுக்க அவள் பயந்தாள். உடனே அவளது கன்னதில் தேவா முத்தம் தரவும் திமிறினாள்
”விடுங்க என்ன செய்றீங்க விடுங்க” என கத்த அவன் அவளது இதழில் முத்தம் தர அதோடு அமைதியானாள் கீர்த்தனா.
தாஸும் தாமரையும் அந்த தனியாக இருந்த அந்தச் சின்ன வீட்டை பார்த்தார்கள்
”சின்னதா இருக்கு, போதும் போடா, பெரிய வீட்ல வாழ்ந்து அலுத்துப் போச்சி ஆமா என்ன நாமளே வீட்டை சுத்திப்பார்த்துட்டோம், இன்னும் தேவாவையும் கீர்த்தனாவையும் காணலையே தாஸ் அவங்களை கூட்டிட்டு வா” என சொல்ல தாஸ் உடனே வெளியே காரிடம் சென்றான். கார் ஜன்னலை தட்ட கதவு திறக்காமல் போகவே அவனுக்கு சந்தேகமானது. காரின் ஜன்னலை படபடவென தட்டவும் சில நொடிகளில் கார் கதவு திறந்து தேவா வெளியேறி
”எதுக்குடா ஜன்னலை உடைக்கற” என கத்த தாஸ் அவனை தள்ளிவிட்டு காருக்குள்